Close Menu
    What's Hot

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட குஜராத் இளைஞர்: பிரதமர் உதவியை நாடி வீடியோ!
    உலகம்

    ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட குஜராத் இளைஞர்: பிரதமர் உதவியை நாடி வீடியோ!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rasya
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் தான் தாயகம் திரும்ப விரும்பவதாகவும், அதற்காக பிரதமர் மோடியின் உதவியை நாடுவதாகவும் கோரி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், ரஷ்யாவுக்கு கல்வி, வேலை நிமித்தமாகச் செல்லும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

    குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாஹில் முகமது ஹுசைன் மஜோத்தி. 23 வயதான இந்த இளைஞர், தங்கள் படைகள் வசம் சரணடையும் வீடியோ ஒன்றை கடந்த அக்டோபர் மாதம் உக்ரைன் படைகள் வெளியிட்டது. ரஷ்யாவுக்காக போர் செய்த அவர் உள்ளிட்ட பலர் அந்த வீடியோவில் இருந்தனர். அப்போதே மஜோத்தி இந்திய ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வந்துவிட்டார்.

    ஆனால், அதன்பின்னர் அவரைப் பற்றி பெரிதாக செய்திகள் ஏதும் வராத நிலையில், தற்போது தான் தாயகம் திரும்ப இந்திய அரசும், பிரதமரும் உதவ வேண்டியுள்ளார்.

    உக்ரைன் படைகள் தங்களிடம் சரணடையும் படைவீரர்கள் வாழ்வதற்கு வழி செய்யும் வகையில் அவர்களுக்காக ஒரு அமைப்பை வைத்துள்ளது. அதன் மூலம் அவர்கள், அவர்கள் சார்ந்த நாட்டிடம் உதவி கோரலாம். அதன் அடிப்படையில் தான் மஜோத்தி தற்போது இந்திய அரசின் உதவியை நாடியுள்ளார்.

    கடந்த 2024 ஜனவரி 10-ம் தேதி மஜோத்தி, மாணவர் விசாவில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் சென்றார். அங்குள்ள ஐடிஎம்ஓ பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மொழி மற்றும் கலாச்சாரம் படிப்பதற்காகச் சென்றார். ஆனால், சட்டச் சிக்கலில் சிக்கி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. ரஷ்யப் படையில் இருந்த அவரை உக்ரைன் படைகள் சிறைப்பிடித்தன.

    இந்நிலையில், மஜோத்தி தனது குடும்பத்தினருக்கு ஆங்கிலம், இந்தி என இரண்டு மொழிகளில் வீடியோ அனுப்பியுள்ளார். அதில் அவர், “இப்போது நான் உக்ரைனில் போர் குற்றவாளியாக இருக்கிறேன். எனக்கு நம்பிக்கைபோய்விட்டது. என் எதிர்காலம் என்னவாகுமென்று தெரியவில்லை.

    ரஷ்யாவுக்கு கல்வி, வேலைக்காக வருபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இங்கே நிறைய மோசடி நபர்கள் உள்ளனர். உங்களை கிரிமினல், போதைப் பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத வழக்குகளில் சிக்கவைப்பர். முடிந்தவரை இதிலிருந்து விலகியிருங்கள்.

    நான் போதைப் பொருள் வழக்கில் சிக்கவைக்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றேன். அதிலிருந்து வெளிவர ரஷ்ய சிறையில் இருந்தபோது போர் பத்திரத்தில் கையெழுத்திட்டேன். அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. இந்திய அரசு, பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என்னை விடுவிக்கக் கோருகிறேன்.” என்று பேசியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோதையில் கார் ஓட்டிய நபர்.. விபத்தில் சிக்கி காயமடைந்த போதும்… நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை!
    Next Article உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்க அமைதி திட்டம் குறித்து பேச்சு நடப்பதாக ரஷ்யா தகவல்
    Editor TN Talks

    Related Posts

    ஆப்பிரிக்காவை உலுக்கும் அரிய வகை எபோலா வைரஸ்!. காங்கோவில் 80 பேர் பலி!.

    May 17, 2026

    டிரம்ப் போட்ட ‘ஒரே ஒரு போஸ்ட்!. மீண்டும் போர் தொடக்கம்?. உலக நாடுகள் அச்சம்!

    May 17, 2026

    லெபனானில் தொடரும் அட்டூழியம்..! கன்னி மரியாள் சிலையில் சிகரெட்..!

    May 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.