Close Menu
    What's Hot

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»விஜய் கட்சியை கிண்டலடித்த சரத்! தேர்தலுக்கு பிறகு தவெக இருக்குமா என கேள்வி
    அரசியல்

    விஜய் கட்சியை கிண்டலடித்த சரத்! தேர்தலுக்கு பிறகு தவெக இருக்குமா என கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sarath
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெகவை அரசியல் கட்சியாகவே தான் பார்க்கவில்லை, தேர்தலுக்கு பிறகு அக்கட்சி இருக்குமா, இருக்காதா எனத் தெரியாது என்று பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

    தென்காசி மாவட்டம், புளியங்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திரைப்பட நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது தென்காசி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், “தேர்தல் அறிவிக்கப்பட்டு மாநில நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து எத்தனை இடத்தில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப் போகிறோம்? என்று தெரிந்த பின்பு முடிவெடுக்கப்படும். மேலும், நான் நிற்பதை விட என்னுடன் பயணித்தவர்கள் நின்றால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன்” என்றார்.

    தமிழகத்தில் வன்கொடுமை தொடர்பான புகார்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்கிறது. மதக் கலவரமாக இருந்தால் தடுக்கலாம். போட்டி, பொறாமை போன்ற கொலை வழக்குகள் காவல் துறைக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் போதையால் பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது. போதை கலாச்சாரம் தற்போது அதிகமாக உள்ளது” என்றார்.

    நூறு நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம் தொடர்பான கேள்விக்கு, “100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தற்போது 125 நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திமுக மத்திய அரசின் எந்த நல்ல திட்டத்தையும் வரவேற்பதில்லை. நல்ல திட்டமாக இருந்தால் அவர்களுடைய பெயரை போட்டுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு பாதகமாக இருந்தால் குறை சொல்கின்றனர்” என்றார்.

    விஜய் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “தேர்தலையே சந்திக்காத விஜய் தற்போது தேர்தலை சந்திக்க உள்ளார். முதலில் தேர்தலில் போட்டி போட வேண்டும். என்ன நிலைபாடு, கொள்கை, கோட்பாடு என்பதை தெரிவிக்காமல் தனி நபர் தாக்குதலை மட்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார். தவெக-வை அரசியல் கட்சியாக நான் பார்க்கவில்லை. தேர்தலை சந்தித்தப் பின்பு தான் நிலைபாடு தெரியும். அதன்பின்பு கட்சி இருக்குமா? இல்லையா? என்று தெரியும்.

    தூத்துக்குடியில் தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் விஜய் கார் முன்னால் நின்றுள்ளார். அவரை ஒரு பெண்ணாக, மனிதாபிமானம் அடிப்படையில் விஜய் காரை விட்டு இறங்கி என்ன குறை? என்று கேட்டிருக்கலாம். அது தான் கதாநாயகன், தலைவனாக இருக்க முடியும். ஆனால் அவர் அதனை அன்று செய்யாமல் இருந்ததால் தர்ணா போராட்டம், மற்றும் தூக்க மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். அன்று அவர் இறங்கி இரண்டு வார்த்தைகள் என்ன என்று கேட்டிருந்தால் இந்த பிரச்னையை இருந்திருக்காது” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
    Next Article தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு
    Editor TN Talks

    Related Posts

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    December 26, 2025

    50க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்கும் பாஜக!. கிடுக்கிபிடிபோடும் அதிமுக!. வெளியான தகவல்!

    December 26, 2025

    சிங்கள சதியை முறியடிக்க வேண்டும்! பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    அதிமுகவில் டிச.31 வரை விருப்ப மனு அளிக்கலாம்! இபிஎஸ் அறிவிப்பு

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    Trending Posts

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.