Close Menu
    What's Hot

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»விஜய் கட்சியை கிண்டலடித்த சரத்! தேர்தலுக்கு பிறகு தவெக இருக்குமா என கேள்வி
    அரசியல்

    விஜய் கட்சியை கிண்டலடித்த சரத்! தேர்தலுக்கு பிறகு தவெக இருக்குமா என கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sarath
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெகவை அரசியல் கட்சியாகவே தான் பார்க்கவில்லை, தேர்தலுக்கு பிறகு அக்கட்சி இருக்குமா, இருக்காதா எனத் தெரியாது என்று பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

    தென்காசி மாவட்டம், புளியங்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திரைப்பட நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது தென்காசி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், “தேர்தல் அறிவிக்கப்பட்டு மாநில நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து எத்தனை இடத்தில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப் போகிறோம்? என்று தெரிந்த பின்பு முடிவெடுக்கப்படும். மேலும், நான் நிற்பதை விட என்னுடன் பயணித்தவர்கள் நின்றால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன்” என்றார்.

    தமிழகத்தில் வன்கொடுமை தொடர்பான புகார்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்கிறது. மதக் கலவரமாக இருந்தால் தடுக்கலாம். போட்டி, பொறாமை போன்ற கொலை வழக்குகள் காவல் துறைக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் போதையால் பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது. போதை கலாச்சாரம் தற்போது அதிகமாக உள்ளது” என்றார்.

    நூறு நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம் தொடர்பான கேள்விக்கு, “100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தற்போது 125 நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திமுக மத்திய அரசின் எந்த நல்ல திட்டத்தையும் வரவேற்பதில்லை. நல்ல திட்டமாக இருந்தால் அவர்களுடைய பெயரை போட்டுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு பாதகமாக இருந்தால் குறை சொல்கின்றனர்” என்றார்.

    விஜய் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “தேர்தலையே சந்திக்காத விஜய் தற்போது தேர்தலை சந்திக்க உள்ளார். முதலில் தேர்தலில் போட்டி போட வேண்டும். என்ன நிலைபாடு, கொள்கை, கோட்பாடு என்பதை தெரிவிக்காமல் தனி நபர் தாக்குதலை மட்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார். தவெக-வை அரசியல் கட்சியாக நான் பார்க்கவில்லை. தேர்தலை சந்தித்தப் பின்பு தான் நிலைபாடு தெரியும். அதன்பின்பு கட்சி இருக்குமா? இல்லையா? என்று தெரியும்.

    தூத்துக்குடியில் தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் விஜய் கார் முன்னால் நின்றுள்ளார். அவரை ஒரு பெண்ணாக, மனிதாபிமானம் அடிப்படையில் விஜய் காரை விட்டு இறங்கி என்ன குறை? என்று கேட்டிருக்கலாம். அது தான் கதாநாயகன், தலைவனாக இருக்க முடியும். ஆனால் அவர் அதனை அன்று செய்யாமல் இருந்ததால் தர்ணா போராட்டம், மற்றும் தூக்க மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். அன்று அவர் இறங்கி இரண்டு வார்த்தைகள் என்ன என்று கேட்டிருந்தால் இந்த பிரச்னையை இருந்திருக்காது” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
    Next Article தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு
    Editor TN Talks

    Related Posts

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    July 5, 2026

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    July 5, 2026

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    முருகப்பெருமானை தவறாக சித்தரித்தால்..! ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்களை உடனடியாக நீக்குக!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.