Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»நாட்டின் எதிர்பார்ப்புகள்; அனைத்து எம்.பி.க்களுக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள்!.
    இந்தியா

    நாட்டின் எதிர்பார்ப்புகள்; அனைத்து எம்.பி.க்களுக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள்!.

    Editor web3By Editor web3January 29, 2026Updated:January 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pm modi speech today
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார திசையைத் தீர்மானிக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள், முக்கியப் பொருளாதார முடிவுகள் மற்றும் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட் மற்றும் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2026-27ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை ஆகியவை இந்தக் கூட்டத்தொடரை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகின்றன. இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

    அப்போது பேசிய பிரதமர் மோடி, நேற்று குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை, 140 கோடி குடிமக்களின் தன்னம்பிக்கை மற்றும் உறுதியின் சக்திவாய்ந்த வெளிப்பாடாக இருந்தது என்று கூறினார். குடியரசுத் தலைவரின் உரை, குறிப்பாக இளைஞர்களை மையமாகக் கொண்டு, 1.4 பில்லியன் குடிமக்களின் கனவுகளையும் விருப்பங்களையும் துல்லியமாக எடுத்துரைத்ததாகவும் அவர் கூறினார்.

    https://x.com/ANI/status/2016745387890266192?

    பாராளுமன்றக் கூட்டத் தொடர் தொடக்கத்திலும், 2026 தொடக்கத்தையும் முன்னிட்டு குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வைத்துள்ள எதிர்பார்ப்புகளை அனைத்து எம்பிக்களும் மிகுந்த பொறுப்புணர்வுடன் எடுத்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழிகாட்டும் பல முக்கிய அம்சங்களையும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவையில் முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    21-ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டு நிறைவடைந்து, தற்போது இரண்டாவது காலாண்டு தொடங்கியுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, இதை ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்றார். மேலும்,  2047 ஆம் ஆண்டுக்குள் ‘வளர்ந்த இந்தியா’ என்ற இலக்கை அடைவதற்கான அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை என கூறிய அவர், இந்த நூற்றாண்டின் இரண்டாம் காலகட்டத்தின் முதல் பட்ஜெட் இது என்றும், இது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் தெரிவித்தார்.

    நாட்டின் முதல் பெண் நிதியமைச்சராக, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்பவர் நிர்மலா சீதாராமன் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். இது இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு பெருமைக்குரிய தருணம் என்று வர்ணித்த அவர், இந்த சாதனை தனித்துவமானதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான ஒன்றாகும் என்றும் வலியுறுத்தினார்.

    ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு மிக்கது என்று கூறிய பிரதமர் மோடி, 27 நாடுகளுடன் ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், நாட்டின் இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிய விரும்பும் உற்பத்தி மற்றும் சேவைத் துறையினருக்குச் சிறந்த வாய்ப்புகளை வழங்கும் என்று பிரதமர் மோடி கூறினார். இந்த ஒப்பந்தம், தன்னம்பிக்கை மிக்க, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் உற்பத்தித்திறன் கொண்ட இந்தியாவை நோக்கிய ஒரு முக்கியப் படியாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    நாடு பட்ஜெட் மீது கவனம் செலுத்துவது இயல்பானது என்றாலும், இந்த அரசாங்கத்தின் அடையாளம் எப்போதும் சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் ஆகியவையே என்று அவர் குறிப்பிட்டார். நாடு இப்போது சீர்திருத்த விரைவு ரயிலில் வேகமாகப் பயணித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். நாடாளுமன்றத்தில் உள்ள தனது சக உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த பிரதமர், இந்த சீர்திருத்த விரைவு ரயிலின் வேகத்தை அதிகரிப்பதில் அவர்களும் ஒரு நேர்மறையான பங்கை வகிப்பதாகக் கூறினார். இந்த ஒத்துழைப்பினால்தான் சீர்திருத்தங்களின் வேகம் சீராக அதிகரித்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும், நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பதிலளிக்க தயார் என்ற அவர், மக்கள் குரலுக்கு மதிப்பளிக்கும் விதமாக நாடாளுமன்றம் திகழவேண்டும் என்றும்  நாடாளுமன்றம் மக்களின் வளர்ச்சி, மேம்பாட்டிற்கான இடமாக இருக்க வேண்டும் என்றும் என்றார். மேலும், இந்தியா 2028க்குள் உலக பொருளாதாரத்தில் 2ம் இடம் பிடிக்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

     

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஃபாஸ்டேக் முதல் நிலப் பதிவு வரை!. பிப்.1 முதல் இந்த விதிகளில் மாற்றம்!.
    Next Article ‘நான் அணிக்கு முக்கியமில்லை’!. ஓய்வு குறித்து கே.எல்.ராகுல் ஓபன் டாக்!
    Editor web3
    • Website

    Related Posts

    பாருயிபூர் சிறுமி பாலியல் வன்கொடுமை – கொலை வழக்கு: மம்தா பானர்ஜியின் பேரணிக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி

    July 7, 2026

    ‘காக்ரோச் ஜனதா கட்சி’ எக்ஸ் கணக்கு –  மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

    July 7, 2026

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்டோருக்கு முழு ஆதரவு வழங்க பிரியங்கா காந்தி வேண்டுகோள்

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    குதிரைப் பேர வழக்கு: 3 பேருக்கும் போலீஸ் காவலா? நாளை முடிவு

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.