பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வரும்போது, நான் இந்த புத்தகத்தை அவரிடம் கொடுப்பேன் என்று ஜெனரல் நரவனேவின் புத்தகம் தொடர்பாக ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.
8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பிரதமருக்கு இன்று மக்களவைக்கு வரும் துணிச்சல் இருக்காது எனக் கருதுகிறேன். ஒருவேளை அவர் வந்தால். நரவனே எழுதிய இந்தப் புத்தகத்தை அவரிடம் கொடுப்பேன் என்று கூறினார்.
இது நரவணே எழுதிய புத்தகம் என்றும், அதை அவர் முழுமையாக விரிவாக எழுதியுள்ளார் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். அந்தப் புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்ட அனுமதி இல்லை என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அது முழுமையாக எழுதப்பட்டுள்ள நூலாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், அந்தப் புத்தகத்தில் முக்கியமான கருத்துகள் இடம்பெற்றுள்ளன என்றும், “உங்களுக்கு பொருத்தமானதாக தோன்றுவது எதுவோ அதைச் செய்யலாம்” என்று பிரதமர் கூறியுள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார். அதாவது, இந்தப் புத்தகத்தில் முக்கியமான வரி “ஜோ உசித் சம்ஜோ வோ கரோ” (எது சரியாகப் படுகிறதோ அதைச் செய்யுங்கள்) என்பதுதான்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, கைலாஷ் ரிட்ஜ் பகுதியில் சீன டாங்கிகள் வந்துள்ளதாக இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் நரவனே பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு, “இந்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டதாக கூறினார்.
அப்போது ராஜ்நாத் சிங் ஆரம்பத்தில் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும், பின்னர் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) ஆகியோரிடமும் அவர் ஆலோசனை கேட்டதாகவும், ஆனால் யாரிடமிருந்தும் தெளிவான பதில் கிடைக்கவில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
பின்னர் தான் நரவனே, ராஜ்நாத் சிங்கை அழைத்ததாக ராகுல் காந்தி கூறினார். ராஜ்நாத் சிங், “நான் உயர் அதிகாரிகளிடம் கேட்கிறேன்” என்று கூறினார். உயர் அதிகாரிகளின் உத்தரவு என்னவென்றால், சீனப் படைகள் நமது எல்லைக்குள் நுழைந்தால், எனக்குத் தெரிவிக்காமல் அவர்கள் சுடக்கூடாது என்பதுதான். அந்த நேரத்தில் நரவனேயும் ராணுவமும் சுட விரும்பின, ஆனால் நரேந்திர மோடி, அவர்களுக்கு ”எது சரியாகப் படுகிறதோ அதைச் செய்யுங்கள்” என்று ஒரு செய்தியை அனுப்பினார்.
மேலும், “நரேந்திர மோடி தனது பொறுப்பை உணரவில்லை” என்றும், பிரதமர் தனது பொறுப்பை புரிந்துகொள்ளாமல், இராணுவத்தினருக்கு “எது சரியாகப் படுகிறதோ அதைச் செய்யுங்கள். இது என் கட்டுப்பாட்டிற்குள் இல்லை” என்று சொல்லியதாகவும் அவர் குற்றச்சாட்டியுள்ளார்.
மேலும், ஜெனரல் நரவனே தனது புத்தகத்தில் “அந்த நேரத்தில் நான் முழுமையாக தனிமையில் இருந்தேன் மற்றும் உதவி பெற முடியாத நிலைமை” என்று எழுதியுள்ளதை ராகுல் காந்தி குறிப்பிட்டார். இறுதியாக, ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீண்டும் பாராளுமன்றத்திற்கு திரும்பும்போது, அந்த புத்தகத்தை நேரடியாக அவரிடம் வழங்குவேன் என்று கூறினார்.
