Close Menu
    What's Hot

    மறுக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி… திறக்கப்படாத மேட்டூர் அணை… விவசாயிகளை வீதிக்கு தள்ளிய விடியா அரசு!. இபிஎஸ் அட்டாக்!

    சரக்கு வாகனம் மோதி கோர விபத்து!. பள்ளிக்கு சென்ற தாத்தா, பேரக்குழந்தைகள் துடிதுடித்து மரணம்!

    திமுக தோல்வி: ஸ்டாலினை அதிரவைத்த ஆய்வுக்குழுவின் 4 காரணங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»வார்னிங்!. 29ம் தேதி வரை இயல்பை விட 3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!.
    தமிழ்நாடு

    வார்னிங்!. 29ம் தேதி வரை இயல்பை விட 3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!.

    Editor web3By Editor web3April 26, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    heat
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் இன்று முதல் 29ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இயல்பை விட 3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

    இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: சுமார் 0.9 கிமீ உயரத்தில், வடக்கு உள் கர்நாடகா முதல் குமரிக்கடல் வரை தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 28 மற்றும் 29ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழையும், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    30ம் தேதி கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மிதமான முதல் கன மழையும், இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 1ம் தேதி நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மிதமான முதல் கன மழையும், இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    இன்று முதல் 29ம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். இன்று முதல் 29ம் தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசவுகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசவுகரியம் ஏற்படலாம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவா? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!
    Next Article பற்றி எரியும் மணிப்பூர்!. போராட்டத்தில் குதித்த தாய்மார்கள்!. மீண்டும் பதற்றம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    மறுக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி… திறக்கப்படாத மேட்டூர் அணை… விவசாயிகளை வீதிக்கு தள்ளிய விடியா அரசு!. இபிஎஸ் அட்டாக்!

    June 12, 2026

    சரக்கு வாகனம் மோதி கோர விபத்து!. பள்ளிக்கு சென்ற தாத்தா, பேரக்குழந்தைகள் துடிதுடித்து மரணம்!

    June 12, 2026

    திமுக தோல்வி: ஸ்டாலினை அதிரவைத்த ஆய்வுக்குழுவின் 4 காரணங்கள்!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மறுக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி… திறக்கப்படாத மேட்டூர் அணை… விவசாயிகளை வீதிக்கு தள்ளிய விடியா அரசு!. இபிஎஸ் அட்டாக்!

    சரக்கு வாகனம் மோதி கோர விபத்து!. பள்ளிக்கு சென்ற தாத்தா, பேரக்குழந்தைகள் துடிதுடித்து மரணம்!

    திமுக தோல்வி: ஸ்டாலினை அதிரவைத்த ஆய்வுக்குழுவின் 4 காரணங்கள்!

    ”வாடி நிற்கும் விவசாயிகள்…”- காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்? – திமுக கேள்வி

    புதுச்சேரியில் ஒரு ‘தவெக’ ஸ்டைல் திருமணம்!. மேடையை அலங்கரித்த முதல்வர் விஜய் படம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.