திருமணம் செய்வது என்பது கட்டாயம் இல்லை எனவும், திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணரும், திமுக நிர்வாகியுமான திவ்யா பேட்டி ஒன்றில், திருமணம் செய்து கொண்ட பிறகே குழந்தைகள் பெறலாம் என்பதை தான் ஏற்கவில்லை. திருமணமாகாமலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். தன்னுடைய வாழ்க்கை முடிவுகளுக்கு தந்தை சத்யராஜ் தடைபோட்டது இல்லை எனக் கூறியிருந்தார்.
திவ்யாவின் கருத்தை சிலர் ஆதரித்தும், பலர் எதிர்த்தும் சர்ச்சையான நிலையில், நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.
நான் ஒரு பெரியாரியவாதி. சாதி, மத சடங்குகளில் எனக்கு உடன்பாடில்லை.
திருமணம் என்பது கட்டாயமில்லை. அது தனிநபர் விருப்பத்தை சார்ந்த விஷயம்.
திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் இன்றைய மருத்துவத்துறையில் வாய்ப்புகள் உள்ளது.
திவ்யாவின் கருத்துகளில் நானும் உடன்படுகிறேன் என நடிகர் சத்யராஜ் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
