Close Menu
    What's Hot

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எடப்பாடி Vs வேலுமணி – துரோகப் புகாரும், அதிரடிப் பேட்டியும்!
    Featured

    எடப்பாடி Vs வேலுமணி – துரோகப் புகாரும், அதிரடிப் பேட்டியும்!

    Editor web1By Editor web1May 14, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    EPS SP Velumani 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தொடர் தேர்தல் தோல்விகள் மற்றும் உட்கட்சி விவகாரங்களால் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளதாக கருதப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமியும், எஸ்.பி. வேலுமணி தரப்பும் மாறி மாறி பரஸ்பரம் இன்று வெளியிட்டுள்ள கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

    முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பு பிரிவு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 25 பேர் ஆதரவளித்ததைத் தொடர்ந்து, அவர்களின் கட்சிப் பதவியைப் பறித்து உத்தரவிட்டுள்ளார் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி. அத்துடன் இரு தரப்பும் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக மாறி மாறி பரஸ்பரம் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளது.

    பதவிக்காக துரோகம்

    இந்த நிலையில் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, கடந்த மே 13-ஆம் தேதி நடந்த அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், கழகக் கொறடாவின் உத்தரவை மீறி ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல் கழகத்திற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பதவி ஆசைக்காகவும், வாரியத் தலைவர் பதவிகளுக்காகவும் சுயநலத்துடன் செயல்படும் இவர்களது இழிசெயலைத் தொண்டர்கள் முறியடிப்பார்கள் என்றும், இதுபோன்ற விலகல்களால் கழகத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    எடப்பாடியின் இந்த அறிக்கையைத் தொடர்ந்து, இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதிரடியான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

    எடப்பாடியே பொதுச் செயலாளர்

     எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களுக்கு எல்லா பதவிகளும் புரட்சித்தலைவி அம்மா கொடுத்து விட்டார்கள். அதற்குப் பிறகு தொடர்ந்து தோல்விதான் 2019, 21, 26 என நடைபெற்ற தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளோம்.

    இப்போதும் அவர்தான் பொதுச் செயலாளர் எல்லாத்தையும் கூட்டு அரவணைத்து பேச வேண்டும். கண்டிப்பாக கட்சியை கட்டமைக்க வேண்டும் பொதுக்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும். மாவட்ட செயலாளர்களிடம் பேசி அவரிடம் ஒப்படைக்க உள்ளோம். திமுக எதிர்ப்பில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதேபோன்று உடனடியாக நீக்கத்தை விட்டு விட்டு உட்கார்ந்து பேச வேண்டும். தோல்வியை பற்றி ஆராய்ந்து கட்சியை நன்றாக வேகப்படுத்த வேண்டும். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்படியே இருந்தால் யார் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முன் வருவார்கள். அது எல்லாம் சரி செய்ய வேண்டும். மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையட்டும். சும்மா எதையாவது பேசி பேட்டி கொடுக்கக் கூடாது. வாட்ஸ்-அப் மற்றும் எக்ஸ் வலைதளங்களில் இப்பொழுது வேகமாக இருக்கக்கூடிய நிலையில், இதை ஏற்கனவே செய்திருந்தால் தேர்தலில் கூடுதலாக இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம். எங்களைப் பொறுத்தவரை அளவு மக்கள் ஆதரவு தமிழக வெற்றி கழகத்திற்கு கொடுத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் பொதுச்செயலாளர் அனைவரையும் கூட்டி கட்சியைக் கட்டமைக்க வேண்டும். இதனால் தோல்வி எங்கு தவறு செய்தோம் என்பதை ஆராய வேண்டும் என்றார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தல் தோல்வியும் ஸ்டாலினின் ராஜதந்திர நகர்வும்!
    Next Article விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு
    Editor web1
    • Website

    Related Posts

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    July 4, 2026

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?

    July 4, 2026

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    தவெகவில் இணைய யார் வற்புறுத்தியது? ஆதாரத்துடன் சொல்லட்டும்!. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.