தான் 2018-இல் சொன்னபடியே விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகி விட்டார் என குருவாயூர் கோவிலில் இசைக்கருவி வசிப்பவரும், ரசிகருமான கிருஷ்ணதாஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் இசைக்கருவி வசிப்பவரான கிருஷ்ணதாஸ், நடிகர் விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படத்தைப் பார்த்ததில் இருந்து விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். விஜய்யின் புதுப்படங்கள் வரும்போதெல்லாம் கோயில்களுக்கு சென்று அங்க பிரதட்சனம் செய்வது உள்பட வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றியுள்ளார்.
இதையறிந்து கடந்த 2018ஆம் ஆண்டு ஊடகம் ஒன்று இவரைச் சந்தித்து பேட்டி கேட்டபோது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் வருவார் எனத் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவைப் பார்த்து பலரும் அவரை ஏளணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சரான நிலையில், மீண்டும் அதே ஊடகம் கிருஷ்ணதாஸை சந்தித்து பேட்டி கண்டுள்ளது. அப்போது 108 கோயில்களில் விஜய்க்காக தான் அங்கப்பிரதட்சணம் செய்ததால், அவர் 108 தொகுதிகளைக் கைப்பற்றியதாகக் கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே தான் சொன்னபடியே விஜய் முதலமைச்சராகி விட்டதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே தனது ஆசை எனவும் கிருஷ்ணதாஸ் தெரிவித்துள்ளார்.
