நீட் ஒழியாத வரை.. நம் பிள்ளைகளுக்கு நிம்மதியில்லை என திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி கூறியுள்ளார்.
2026 மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில், இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு வரும் ஜூன் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நீட் தேர்வே வேண்டாம் என முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, ‘நீட்’ என்பதே அடிப்படையில் ஒரு மோசடிதான் என்பதை ஆரம்பத்திலிருந்து சொல்லிவருகிறது தி.மு.க. தொடர் முறைகேடுகளால், அதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தவும் செய்கிறது ஒன்றிய பாஜக அரசு. நீட் ஒழியாத வரை.. நம் பிள்ளைகளுக்கு நிம்மதியில்லை எனப் பதிவிட்டுள்ளார்.
