Close Menu
    What's Hot

    சபாநாயகருடன் செங்கோட்டையன் சந்திப்பு – அதிமுக கடிதம் குறித்து ஆலோசனை?

    அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

    மருத்துவத்துறை தமிழகத்தின் நம்பர் 1 துறையாக வேண்டும் – அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»‘பெண்கள் அமைதியாக இருந்தால் திருமணத்திற்கு சம்மதம்’!. தாலிபனின் புதிய சட்டத்தால் சர்ச்சை!
    தமிழ்நாடு

    ‘பெண்கள் அமைதியாக இருந்தால் திருமணத்திற்கு சம்மதம்’!. தாலிபனின் புதிய சட்டத்தால் சர்ச்சை!

    Editor web3By Editor web3May 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    New Taliban Law
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள புதிய குடும்பச் சட்டம், பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.

    தாலிபன்களின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா ஒப்புதல் அளித்துள்ள, 31 பிரிவுகளைக் கொண்ட இந்த “தம்பதியர் பிரிவிற்கான கோட்பாடுகள்” (Principles of Separation Between Spouses) என்ற புதிய சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் என்னவென்றால், பருவமடைந்த ஒரு பெண்ணிடம்திருமணத்திற்கான சம்மதம் கேட்கப்படும்போது, அவர் பயத்தினாலோ அல்லது வேறு காரணங்களாலோ அமைதியாக இருந்தால், அது அந்தத் திருமணத்திற்கு அவர் தெரிவித்த ‘சம்மதம்’ என்றே எடுத்துக்கொள்ளப்படும்.

    இதே விதியின் கீழ், ஒரு சிறுவனுக்கோ அல்லது ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுக்கோ இந்த ‘மௌனம் சம்மதம்’ என்ற விதி பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் திருமணங்களை முடிக்கும் முழு அதிகாரமும் தந்தை மற்றும் தாத்தாக்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் நிச்சயிக்கும் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும்.

    தந்தை அல்லது தாத்தா தவிர மற்ற உறவினர்கள் சிறுவர்-சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைத்தால், அவர்கள் பருவமடைந்த பிறகு  அந்தத் திருமணத்தை ரத்து செய்யக் கோரலாம். ஆனால், அதற்குத் தாலிபன்களின் மத நீதிமன்ற உத்தரவு கட்டாயம் தேவை என்று இந்தச் சட்டம் கூறுகிறது.

    இந்தச் சட்டம் ஆப்கானிஸ்தானில் நிலவும் ‘பாலினப் பாகுபாட்டை’  சட்டப்பூர்வமாக்குகிறது என ஐநா மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. “குழந்தைத் திருமணத்தில் எந்தவொரு உண்மையான சம்மதமும் இருக்க முடியாது. பெண்ணின் மௌனத்தை சம்மதமாக ஏற்பது, அவர்களின் குரலையும் சுதந்திரத்தையும் முழுமையாகப் பறிக்கும் ஆபத்தான செயலாகும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஆறாம் வகுப்பிற்கு மேல் படிக்கத் தடை, வேலைக்குச் செல்லத் தடை எனப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தாலிபன்களின் இந்த புதிய சட்டம் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை மேலும் இருளாக்கியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுகவுக்கு இந்த கதியா?. செம்மலை வருத்தத்துடன் விலகல்!. இபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி!
    Next Article பீனிக்ஸ் பறவை போல் திமுக எழுச்சி பெறும் – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
    Editor web3
    • Website

    Related Posts

    சபாநாயகருடன் செங்கோட்டையன் சந்திப்பு – அதிமுக கடிதம் குறித்து ஆலோசனை?

    May 18, 2026

    அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

    May 18, 2026

    மருத்துவத்துறை தமிழகத்தின் நம்பர் 1 துறையாக வேண்டும் – அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல்

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சபாநாயகருடன் செங்கோட்டையன் சந்திப்பு – அதிமுக கடிதம் குறித்து ஆலோசனை?

    அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

    மருத்துவத்துறை தமிழகத்தின் நம்பர் 1 துறையாக வேண்டும் – அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல்

    மின் கட்டணம் செலுத்த புதிய வசதி!. வங்கி கணக்கில் இருந்து தானாகவே ‘ஆட்டோ பே’ முறை அறிமுகம்!

    குதிரைகளுக்குப் பரவும் கிளாண்டர்ஸ் தொற்று – சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை

    Trending Posts

    பள்ளிகள் திறப்பு!. அமைச்சருடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை!

    May 18, 2026

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    May 18, 2026

    அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

    May 18, 2026

    மின் கட்டணம் செலுத்த புதிய வசதி!. வங்கி கணக்கில் இருந்து தானாகவே ‘ஆட்டோ பே’ முறை அறிமுகம்!

    May 18, 2026

    கேரளத்தின் புதிய முதலமைச்சாராக பதவியேற்றார் வி.டி. சதீசன்!. காங். தலைவர்கள் பங்கேற்பு!

    May 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.