Close Menu
    What's Hot

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    “வாக்குறுதிகளுக்கு டைம் எடுத்துக்கோங்க.. சட்டம் ஒழுங்குக்குக் கூடாது”!. வீரபாண்டியன் அறிவுரை!

    ’ஜனநாயகன்’ குறித்து பேச எனக்கு தைரியம் இல்லை..! ஹெச்.வினோத் ஓபன் டாக்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»9 மாதத்தில் விபரீதமான காதல் திருமணம்..! இளம் பெண் இறந்ததால் பரபரப்பு..!
    தமிழ்நாடு

    9 மாதத்தில் விபரீதமான காதல் திருமணம்..! இளம் பெண் இறந்ததால் பரபரப்பு..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் 9 மாதத்தில் இறந்துபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, சுருட்டப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் (62). இவருக்கு 3மகள்களும், 1மகனும் உள்ளனர். இவருடைய மூத்த மகள் அம்ருதா பிரியதர்ஷினி (27). பி.எஸ்.சி பட்டதாரியான இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருச்சியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் தங்கி வேலைக்காக படித்து வந்துள்ளார்.

    அப்போது தொட்டியம் மேலத்தெருவை சேர்ந்த மகேஷ்குமார் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி உள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 9மாதங்களுக்கு முன்பு இருவரும் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்குப் பின் அம்ருதா பிரியதர்ஷினி, தொட்டியம் மேலத்தெருவில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (25.5.2026) அம்ருதாவின் தந்தை கேசவன் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய மனைவி பதற்றத்துடன் தொலைபேசியில் அழைத்து, மகள் அம்ருதா பிரியதர்ஷினி பேச்சு மூச்சில்லாமல் தொட்டியம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

    இதைகேட்டு அதிர்ச்சியடைந்த கேசவன் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது அம்ருதா பிரியதர்ஷினி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
    காதலித்து திருமணம் செய்த 9 மாதங்களிலேயே மகள் இறந்துள்ளதால் மகளின் இறப்பு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு தந்தை கேசவன், தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அந்தப் புகாரின் பேரில் தொட்டியம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 9 மாதங்களிலேயே அமிருதா பிரியதர்ஷினி இறந்து போனதால் வரதட்சனை கொடுமையா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிதிகளை மீறி ராஜினாமா ஏற்பு; சபாநாயகர் நடவடிக்கை முரணானது!. அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு
    Next Article முதல்வர் விஜய் முதன்முறையாக டெல்லி பயணம்!. பிரதமர் மோடி, காங். தலைவர்களை சந்திக்கிறார்!
    Editor TN Talks

    Related Posts

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    May 31, 2026

    “வாக்குறுதிகளுக்கு டைம் எடுத்துக்கோங்க.. சட்டம் ஒழுங்குக்குக் கூடாது”!. வீரபாண்டியன் அறிவுரை!

    May 31, 2026

    ’ஜனநாயகன்’ குறித்து பேச எனக்கு தைரியம் இல்லை..! ஹெச்.வினோத் ஓபன் டாக்..!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    “வாக்குறுதிகளுக்கு டைம் எடுத்துக்கோங்க.. சட்டம் ஒழுங்குக்குக் கூடாது”!. வீரபாண்டியன் அறிவுரை!

    ’ஜனநாயகன்’ குறித்து பேச எனக்கு தைரியம் இல்லை..! ஹெச்.வினோத் ஓபன் டாக்..!

    10 மணி நேரமாக பேருந்து இல்லை ; மதுரையில் பயணிகள்  கொந்தளிப்பு – சாலை மறியல்

    போலீசாரை வெட்டிய ரவுடி!. சினிமா பாணியில் சுட்டுப்பிடிப்பு!. நெல்லையில் பரபரப்பு!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    T20-ல் சரித்திரம் படைத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்!.

    May 31, 2026

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    May 31, 2026

    “வாக்குறுதிகளுக்கு டைம் எடுத்துக்கோங்க.. சட்டம் ஒழுங்குக்குக் கூடாது”!. வீரபாண்டியன் அறிவுரை!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.