Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»வீணாக கடலில் கலக்கும் 2,500 டிஎம்சி நீர்..!! கர்நாடகாவிடம் ஏன் கெஞ்சுகிறீர்கள்..?? சீமான் கேள்வி..!!
    Featured

    வீணாக கடலில் கலக்கும் 2,500 டிஎம்சி நீர்..!! கர்நாடகாவிடம் ஏன் கெஞ்சுகிறீர்கள்..?? சீமான் கேள்வி..!!

    editor5By editor5May 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 23
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கர்நாடக மாநில முதல்வரும் சரி, துணை முதல்வரும் சரி அவர்களது மாநிலத்திற்கு உண்மையாக இருக்கிறார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்தி, மேகதாது அணை திட்டத்துக்கு தீவிர எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சொந்த நீர் வளத்தை முழுமையாகப் பயன்படுத்தி தன்னிறைவு பெற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மாநிலத்தின் இயற்கை வளங்களிலும் உரிமை கொண்டாட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த சீமான், “தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 950 டிஎம்சி மழை பெய்கிறது. மொத்த நீர் வளம் சுமார் 4,000 டிஎம்சியாக உள்ள நிலையில், தற்போது வெறும் 1,500 டிஎம்சி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 2,500 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது.

    இந்த நிலை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இந்த 2,500 டிஎம்சியில் மேலும் 1,500 டிஎம்சியைச் சேமித்தால், கர்நாடகாவிடம் 150 டிஎம்சிக்காக கெஞ்ச வேண்டிய அவசியமே இருக்காது” என்று தெரிவித்தார். நீர் மட்டுமல்ல, நிலக்கரி, கனிம வளங்கள் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களிலும் தமிழகம் தன் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “நெய்வேலி பழுப்பு நிலக்கரி உனக்கு இல்லை, உன் வளம் உனக்கு, உன் நீர்வளம் உனக்கு, உன் நிலவளம் உனக்கு என்றால், என் நிலவளம் எனக்கு என்றுதானே அர்த்தம். இதற்காக சண்டை செய்ய ஒரு வீரன் தேவை. அதற்கு நீங்கள் ஏன் இல்லை?” என்று தமிழக அரசியல் தலைவர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.

    மத்திய அரசின் பங்கை விமர்சித்த சீமான், “பூட்டு அங்கே இருக்கலாம், ஆனால் சாவி நம்மிடம் இருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்” என்றார். இதற்கு உதாரணமாக, முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ் (என்.டி.ஆர்.) அவர்களைச் சுட்டிக்காட்டினார். இந்திரா காந்தி ஆதிக்கம் செலுத்திய காலத்தில், ஒரே இரவில் மத்திய அரசு அலுவலகங்களைப் பூட்டி சாவியை எடுத்து வந்ததாகவும், பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி திறந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். “அப்படி ஒரு தலைவர் தமிழகத்துக்கு தேவை. சும்மா எல்லாவற்றுக்கும் காலில் விழுந்து கெஞ்சிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.

    கர்நாடக முதல்வரும் துணை முதல்வரும் தங்கள் மாநில நலனுக்கு உண்மையாக இருப்பதைப் பாராட்டிய சீமான், தமிழக தலைவர்களிடம், “நீங்கள் உங்கள் மாநிலத்துக்கு உண்மையாக இருக்கிறீர்களா? மக்கள் உங்களுக்கு வாக்கு அளித்து அதிகாரத்தில் அமர வைத்தார்கள். ஆனால் நீங்கள் ‘இந்தியாவைக் காப்பாற்றப் போகிறேன்’ என்று சொல்கிறீர்கள். இது சரியா?” என்று கேள்வி எழுப்பினார்.

    தமிழகத்தின் நீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண, மேகதாது போன்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, மாநிலத்தின் சொந்த வளங்களை முழுமையாகப் பயன்படுத்தும் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்ந்து அரசியல் விவாதப் பொருளாக இருக்கும் நிலையில், அவரது இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் அரங்கில் குறிப்பிடத்தக்க கவனம் பெற்றுள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு..!! பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா..!!
    Next Article தவெகவில் இணைகிறேனா? கையெடுத்து கும்பிட்ட விஜயபாஸ்கர்..!! கொடுத்த ‘நச்’ பதில்..!!
    editor5

    Related Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    May 30, 2026

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    May 30, 2026

    விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

    May 30, 2026

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.