Close Menu
    What's Hot

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    போர் பதற்றத்தின் தாக்கம்: விமானத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு..!!

    ஆபத்தில் 50% மருத்துவ இட ஒதுக்கீடு… தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»குர்பானி விவகாரம்: “விஜயின் இரட்டை வேடம்… ஐயுஎம்எல் விளக்கம் அளிக்க வலியுறுத்தல்! 
    தமிழ்நாடு

    குர்பானி விவகாரம்: “விஜயின் இரட்டை வேடம்… ஐயுஎம்எல் விளக்கம் அளிக்க வலியுறுத்தல்! 

    Editor web2By Editor web2June 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 vijay 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பக்ரீத் பண்டிகையையொட்டி குர்பானி வழங்கும் நிகழ்வுகளில் த.வெ.க. அரசு தலையிட்டு சிறுபான்மையின மக்களின் மத சுதந்திரத்தை பாதித்துள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்காலத்தில் எந்தத் தடையும் இன்றி நடைபெற்ற பக்ரீத் திருநாள் குர்பானி நிகழ்வுகளுக்கு, த.வெ.க. ஆட்சியில் முதன்முறையாக இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    குர்பானி தொடர்பாக தனிக்குழுக்கள் அமைத்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதோடு, காவல்துறை மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், இதனால் சிறுபான்மையின மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

     

    மேலும், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்தியதாக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கும் நிலையில், அதே அரசில் இடம்பெற்றுள்ள சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான், அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக கூறுவது முரண்பாடான நிலைப்பாடு என ஆவடி நாசர் விமர்சித்துள்ளார்.

    குர்பானி நிகழ்வுகளைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுத்தபோது அமைச்சர் ஏன் தலையிடவில்லை என்றும், அனைத்தும் முடிந்த பிறகு மேல்முறையீடு செய்வதாக அறிவிப்பது அரசியல் நாடகமா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

    avadi nasar 1

    மேலும், சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட அரசாக தன்னை முன்னிறுத்தும் த.வெ.க. அரசு, நடைமுறையில் வேறு விதமாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய ஆவடி நாசர், “நீதிமன்றத்தில் ஒரு நிலைப்பாடு, அரசியல் மேடையில் மற்றொரு நிலைப்பாடு” என்ற இரட்டை அணுகுமுறைக்கு ஐயுஎம்எல் என்ன பதில் அளிக்கப் போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    குர்பானி விவகாரத்தில் சிறுபான்மையின மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமிருகத்தனமான பாலியல் வேட்டை!. 700 பேரால் வன்கொடுமை!. நாய்களால் அரங்கேற்றிய கொடூரம்!
    Next Article அதிமுகவுக்கு எதிரான வழக்கு; திரும்பப் பெற ஓபிஎஸ், ஜேசிடி பிரபாகரன் நீதிமன்றத்திற்கு கடிதம்
    Editor web2
    • Website

    Related Posts

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    June 3, 2026

    ஆபத்தில் 50% மருத்துவ இட ஒதுக்கீடு… தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!

    June 3, 2026

    இபிஎஸ்ஸை சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டதா… இல்லையா?

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    போர் பதற்றத்தின் தாக்கம்: விமானத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு..!!

    ஆபத்தில் 50% மருத்துவ இட ஒதுக்கீடு… தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!

    பழங்குடியின குழந்தைகளுக்கு மேஜையில் மிட்டாய் வீசிய விவகாரம்!. பாஜக எம்.எல்.ஏ முரளிதரனுக்கு கண்டனம்!

    கர்நாடக துணை முதல்வர் இவர்தான்..!! அறிவித்தார் சித்தராமையா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.