Close Menu
    What's Hot

    ”பிடி பீரியட்’ கட்டாயம்” – பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

    முதல்வரைத் தாண்டிய Powercenter ஏதேனும் உள்ளதா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

    மீண்டும் இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்!. அடுத்தடுத்து நடக்கும் 3-வது அதிர்ச்சிச் சம்பவம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ரிப்பன் மாளிகையில் பதற்றம்!. போராட்டத்தில் குதித்த மருத்துவப் பணியாளர்கள்!
    Featured

    ரிப்பன் மாளிகையில் பதற்றம்!. போராட்டத்தில் குதித்த மருத்துவப் பணியாளர்கள்!

    Editor web3By Editor web3June 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Ripon Building Medical staff protest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மே மாதத்திற்கான ஊதியம் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தை முற்றுகையிட்டு 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த மருத்துவப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவச் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

    வருகைப் பதிவேடு செயலி குளறுபடியைக் காரணம் காட்டி, பணியாளர்களின் சம்பளத்தில் பெருமளவில் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, ரூ.18,000 சம்பளம் வாங்கும் செவிலியர்களுக்கு இந்த மாதம் வெறும் ரூ.3,000 மட்டுமே கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    கடந்த திமுக ஆட்சிக் காலம் வரை தங்களுக்குச் சம்பளம் முறையாக வழங்கப்பட்டு வந்ததாகவும், தற்போதைய தவெக ஆட்சித் தொடக்கத்திலேயே இந்தச் செயலிப் பிரச்சனையால் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    கடந்த இரண்டு மாதங்களாகவே சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள சுகாதார நிலைய ஊழியர்களுக்குச் சம்பளக் குளறுபடிகள் நீடித்து வருகின்றன. இது தொடர்பாக உயர்தர அதிகாரிகளைச் சந்திக்கப் பலமுறை முயன்றும், அவர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகப் பணியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    ஆன்லைன் வருகைப் பதிவு முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்றும், அலுவலகத்தில் உள்ள வழக்கமான வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் பிடித்தமின்றிக் முழு ஊதியத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு பெண் காவலர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் பணியாளர்களுடன் கலைந்துபோகும்படி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இருப்பினும், தங்களது துறை சார்ந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் யாரும் இதுவரை பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றும், அவர்கள் நேரடியாக வந்து உறுதி அளிக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் செவிலியர்களும் மருத்துவர்களும் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇதுதான் என் ஆசையா இருந்துச்சு.. ஆனா நடக்கல..!! நடிகர் கருணாஸ் வேதனை..!!
    Next Article அரசியல் சக்தியின் ஆன்மிக துணை..!! கொல்லூர் மூகாம்பிகையை தரிசிக்கிறார் முதல்வர் விஜய்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    ”பிடி பீரியட்’ கட்டாயம்” – பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

    June 11, 2026

    முதல்வரைத் தாண்டிய Powercenter ஏதேனும் உள்ளதா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

    June 11, 2026

    மீண்டும் இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்!. அடுத்தடுத்து நடக்கும் 3-வது அதிர்ச்சிச் சம்பவம்!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”பிடி பீரியட்’ கட்டாயம்” – பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

    முதல்வரைத் தாண்டிய Powercenter ஏதேனும் உள்ளதா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

    மீண்டும் இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்!. அடுத்தடுத்து நடக்கும் 3-வது அதிர்ச்சிச் சம்பவம்!

    ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ‘தனிச் சிறப்புச் சட்டம்’ – காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்

    ஒரே இரத்தம்… இருவேறு தேசம்!. உலகக்கோப்பையில் நேருக்கு நேர் மோதும் 7 ஜோடி சகோதரர்கள்!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.