வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் மின்வாரியத்தின் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக மின்சார வாரியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 31 வரை வழங்கப்பட்ட இடமாற்றம , பதவி உயர்வு , உள்-தேர்வு (internal selection) உத்தரவுகளைப் பெற்ற ஊழியர்கள், உடனடியாக ஜூன் 25க்குள் பழைய பணியிடத்திலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய பணிக்கு சேர வேண்டும். ஜூன் 25க்குள் புதிய பணிக்கு சேராத ஊழியர்களின் மாறுதல் உத்தரவுகள் ரத்து செய்யப்படும்.
மின்சார வாரியம் , மின் பகிர்மான கழகம் , பசுமை எரிசக்தி கழகம் உள்ளிட்ட 4 மின் துறை நிறுவனங்களில் பணி மாறுதல் வெளிப்படைதன்மையோடு மேற்கொள்ளும் வண்ணம் ஜூன் 30-ம் தேதிக்குள் காலிப்பணியிடங்கள் குறித்தான விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின்சார வாரியத்தில் அனைத்து வகையான பணி மாறுதலர்களும் ஆன்லைன் மூலமாக வெளிப்படை தன்மையோடு கையாளப்படும் என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
