Close Menu
    What's Hot

    5 வருஷம் கன்ஃபார்ம்.. தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை..!! விசிக திருமாவளவன் உறுதி..!!

    சி.எம் விஜய் சார்-னு சொல்லுங்க –  அரசுப் பள்ளியில் தவெகவினர்  – மீண்டும் ஒரு ரீல்ஸ் பஞ்சாயத்து!

    விருதுநகர் : போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ்..! தவெக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கிருஷ்ணகிரி : தாயுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..! காதலியை எரித்து கொன்றது விசாரணையில் அம்பலம்..!
    Featured

    கிருஷ்ணகிரி : தாயுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..! காதலியை எரித்து கொன்றது விசாரணையில் அம்பலம்..!

    Editor web4By Editor web4June 30, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 30
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உப்பாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 30 வாதான ராஜசேகர். இவர் கெலமங்கலம் சின்னட்டி பேருந்து நிறுத்தம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு ராஜசேகர் தனது கடை உரிமையாளர் ராஜேஷ்குமார் மற்றும் நண்பர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி, அதனை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.

    அதில், நள்ளிரவில் நானும், எனது தாய் மஞ்சுளாவும் தற்கொலை செய்து கொள்கிறோம். அதற்கு காரணம் பக்கத்து வீட்டை சேர்ந்த ருத்ரப்பா என்பவரும் அவரது குடும்பத்தினரும் தான் என கூறியிருக்கிறார். அத்தோடு என்னையும், எனது தாயையும் ஒரே குழியில் புதைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ராஜசேகரின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ருத்ரப்பாவுக்கும், ராஜசேகருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதனை பார்த்து அதிர்ந்த நண்பர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ராஜசேகரின் செல்போனை டிராக் செய்த போலீசார், சிக்னல் மூலம் தண்டரை ஏரி பகுதியில் அவர் இருப்பதை அறிந்தனர். அங்கு சென்று பார்த்தப் போது, ஏரி அருகே காரை நிறுத்திவிட்டு, தாயும், மகனும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தப் படி ஏரியில் சடலமாக மிதந்ததை கண்டனர்.

    உடனே இருவரது உடல்களையும் மிட்ட போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த போலீசார், ராஜசேகரை தேடி வந்தது தெரியவந்துள்ளது. அப்போது, தாய், மகன் இருவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதை கண்டுபிடித்துள்ளனர்.

    கர்நாடக போலீசார் ராஜசேகரை தேடிய காரணம், பெங்களூருவில் பியூட்டி பார்லர் நடத்தும் நளினி என்பவரை ராஜசேகர் காதலித்து வந்துள்ளனர். ஆனால் வேறு பெண்ணை ராஜசேகர் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இதற்கு காதலி நளினி இடைஞ்சலாக இருப்பதால், அவரை எரித்துக் கொலை செய்துள்ளார். இது தொடர்பான புகாரில் கர்நாடக போலீசார் ராஜசேகரை தேடி வந்துள்ளனர். இதனை அறிந்த ராஜசேகர், போலீசாருக்கு பயந்து தாயுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    krishnagiri love issue murder tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதூங்கு ராஜா தூங்கு..! மறைந்த இயக்குநர் பாரதிராஜா நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து மரியாதை..!
    Next Article மேற்கு வங்கம்: எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து..!! 15 பேர் காயம்..!!
    Editor web4

    Related Posts

    5 வருஷம் கன்ஃபார்ம்.. தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை..!! விசிக திருமாவளவன் உறுதி..!!

    June 30, 2026

    சி.எம் விஜய் சார்-னு சொல்லுங்க –  அரசுப் பள்ளியில் தவெகவினர்  – மீண்டும் ஒரு ரீல்ஸ் பஞ்சாயத்து!

    June 30, 2026

    விருதுநகர் : போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ்..! தவெக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்..!

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    5 வருஷம் கன்ஃபார்ம்.. தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை..!! விசிக திருமாவளவன் உறுதி..!!

    சி.எம் விஜய் சார்-னு சொல்லுங்க –  அரசுப் பள்ளியில் தவெகவினர்  – மீண்டும் ஒரு ரீல்ஸ் பஞ்சாயத்து!

    விருதுநகர் : போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ்..! தவெக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்..!

    2001 கருணாநிதி கைது சம்பவம் – நினைவுகூர்ந்த கனிமொழி எம்.பி; மறந்தாரா மு.க.ஸ்டாலின்?

    நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம்..!! தவெக அரசை சாடிய நயினார்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.