Close Menu
    What's Hot

    “140 கோடி இந்தியா எங்கே? 5 லட்சம் கேப் வெர்டே எங்கே?. அர்ஜென்டினாவையே கதறவிட்ட குட்டி நாடு!

    உலகக்கோப்பை விறுவிறுப்பு!. கானாவை வீழ்த்தி கொலம்பியா த்ரில் வெற்றி!

    மும்பையை புரட்டிப்போட்ட கனமழை: 5 பேர் உயிரிழப்பு..!! கடலோர மாவட்டங்கள் உஷார்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோவையில் மீண்டும் கொடூரம்!. மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!.
    Featured

    கோவையில் மீண்டும் கொடூரம்!. மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!.

    Editor web3By Editor web3July 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kovai gang rape
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வீடியோ எடிட்டிங் வேலை பார்த்து வரும் 33 வயது இளம்பெண் ஒருவரை, மயக்க மருந்து கொடுத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தனது கணவரைப் பிரிந்து தனது 4 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். அதே கட்டிடத்தில் அருகில் அறை எடுத்துத் தங்கியிருந்த அந்தோணி மரிய ராபின் என்பவர், அந்தப் பெண்ணிடம் நட்பாகப் பழகி, அவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஒரு வருடமாகத் தொடர்பில் இருந்துள்ளார். இந்த நிலையில், அந்தோணி மரிய ராபினுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமானதால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, அந்தோணி மரிய ராபின் தனது நண்பர் கிரிஷ் சாமுவேல் குமார் என்பவரை அழைத்துக்கொண்டு, சமாதானம் பேசுவது போல அந்தப் பெண்ணின் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து, அவர் மயங்கிய நிலையில் இருந்தபோது இருவரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மயக்கம் தெளிந்த அந்தப் பெண்ணிடம், தாங்கள் செய்த அராஜகத்தை செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும், இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மிரட்டியுள்ளனர். தங்களைத் திருமணம் செய்ய வற்புறுத்தினாலோ அல்லது காவல் நிலையத்தில் புகார் அளித்தாலோ, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவோம் என்றும், அந்தப் பெண்ணையும் அவரது குழந்தையையும் கொலை செய்துவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அந்தோணி மரிய ராபின் மற்றும் கிரிஷ் சாமுவேல் குமார் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில், சூலூர் பேருந்து நிலையம் அருகே மறைந்திருந்த கிரிஷ் சாமுவேல் குமாரைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அந்தோணி மரிய ராபினை தீவிரமாகத் தேடி வருகின்றனர். கோவையில் தொடர்ச்சியாக இத்தகைய குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    arrest being drugged gang-raped kovai sulur rape Woman gang-raped
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவீடு புகுந்து தாக்கிய வழக்கு: இன்று ஆப்சென்ட் ஆன மரிய வில்சன்..!! புதுவை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!
    Next Article கட்சி கையவிட்டு போகக்கூடாது..!! 2வது நாளாக நிர்வாகிகளுடன் இபிஎஸ் முக்கிய மீட்டிங்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    “140 கோடி இந்தியா எங்கே? 5 லட்சம் கேப் வெர்டே எங்கே?. அர்ஜென்டினாவையே கதறவிட்ட குட்டி நாடு!

    July 4, 2026

    உலகக்கோப்பை விறுவிறுப்பு!. கானாவை வீழ்த்தி கொலம்பியா த்ரில் வெற்றி!

    July 4, 2026

    மும்பையை புரட்டிப்போட்ட கனமழை: 5 பேர் உயிரிழப்பு..!! கடலோர மாவட்டங்கள் உஷார்!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “140 கோடி இந்தியா எங்கே? 5 லட்சம் கேப் வெர்டே எங்கே?. அர்ஜென்டினாவையே கதறவிட்ட குட்டி நாடு!

    உலகக்கோப்பை விறுவிறுப்பு!. கானாவை வீழ்த்தி கொலம்பியா த்ரில் வெற்றி!

    மும்பையை புரட்டிப்போட்ட கனமழை: 5 பேர் உயிரிழப்பு..!! கடலோர மாவட்டங்கள் உஷார்!

    தற்கொலைப்படை தாக்குதலால் அதிர்ந்த பாகிஸ்தான்..!! 30 ராணுவ வீரர்கள் பரிதாப பலி..!!

    இனி சும்மா இருக்கக்கூடாது..!! இபிஎஸ் எடுத்த முக்கிய முடிவு..!! புதுக்கோட்டை அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.