Close Menu
    What's Hot

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    ”அழகு மயில் ஆட…” – ஏகாம்பரநாதர் கோவிலில் நடனமாடிய வீடியோவால் சர்ச்சை!

    பாருயிபூர் சிறுமி பாலியல் வன்கொடுமை – கொலை வழக்கு: மம்தா பானர்ஜியின் பேரணிக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வயநாடு நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்டோருக்கு முழு ஆதரவு வழங்க பிரியங்கா காந்தி வேண்டுகோள்
    Featured

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்டோருக்கு முழு ஆதரவு வழங்க பிரியங்கா காந்தி வேண்டுகோள்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    016 priyanka
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே. முரளீதரன், இந்த நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார். வயநாடு சுரங்கப்பாதை கட்டுமானப் பணியிடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் காயமடைந்த தொழிலாளர்களுக்கு மேம்பட்ட சிகிச்சை அளிக்க வயநாடு மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி, நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார்.

    அவர் தனது பதிவில், “முதல்வர் வி.டி. சதீசன் நேரடியாக நிவாரணப் பணிகளை கண்காணித்து வருகிறார். காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம், அமைச்சர்கள் டி. சித்திக், ஏ.பி. அனில் குமார் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், “தங்களின் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் அவர்களுடன் நாங்கள் துணையாக இருப்போம். இன்னும் மீட்கப்படாதவர்களுக்காக பிரார்த்திக்கிறோம். மீட்புப் பணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அனைவரும் உதவ வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    வயநாடு சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் கட்டுமான அமைப்பு இடிந்து விழுந்தது.

    இந்த சம்பவம் குறித்து கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் பலமுறை எச்சரித்த போதிலும், தோண்டி எடுக்கப்பட்ட மண்ணை அகற்ற ஒப்பந்ததாரர்கள் நடவடிக்கை எடுக்காததே இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டினார்.

    கேரள அமைச்சர் டி. சித்திக், “இது இயற்கை பேரிடர் அல்ல; அலட்சியத்தால் ஏற்பட்ட மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர்” என்று குற்றம்சாட்டினார். ஆபத்து குறித்து முன்கூட்டியே கொங்கண் ரயில்வே நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டும், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    8 பேர் உயிருடன் மீட்பு

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து ஹிரா குமார் (32), திலீப் (19), சூரஜ் யாதவ் (25), சஞ்சய் தாக்கூர் (35), ரஜ்னீஷ் (27), தன்மய் கோஷ் (28), கூப்பமல் (ஜெயா) (37), குஞ்சு (39) ஆகிய 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மேப்பாடி WIMS மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Kerala landslide landslide deaths Priyanka Gandhi Wayanad landslide
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவளமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா – இந்தோனேசியா பயணம்;  இருநாடுகளின் கலாச்சார பிணைப்பை புகழ்ந்த பிரதமர் மோடி
    Next Article ‘காக்ரோச் ஜனதா கட்சி’ எக்ஸ் கணக்கு –  மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    July 7, 2026

    ”அழகு மயில் ஆட…” – ஏகாம்பரநாதர் கோவிலில் நடனமாடிய வீடியோவால் சர்ச்சை!

    July 7, 2026

    பாருயிபூர் சிறுமி பாலியல் வன்கொடுமை – கொலை வழக்கு: மம்தா பானர்ஜியின் பேரணிக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    ”அழகு மயில் ஆட…” – ஏகாம்பரநாதர் கோவிலில் நடனமாடிய வீடியோவால் சர்ச்சை!

    பாருயிபூர் சிறுமி பாலியல் வன்கொடுமை – கொலை வழக்கு: மம்தா பானர்ஜியின் பேரணிக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி

    ”அரசு வழக்கறிஞர்கள் இல்லாமல் தடுமாறும் நீதிமன்ற விசாரணைகள்” – தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

    கத்தை கத்தையாகப் பணம்; செந்தில்பாலாஜிக்கு அறிமுகமான நரேஷ் வீட்டில் போலீசார் பறிமுதல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.