Close Menu
    What's Hot

    கிருஷ்ணகிரியில் 32வது மாங்கனி கண்காட்சி… நாவில் நீர் ஊற வைத்த மாம்பழங்கள்

    டிரம்புடன் கோல்ஃப் ; மறக்க முடியாத தருணம் – ஹாரி கேன் நெகிழ்ச்சி

    இது புதுசா இருக்கே!. குப்பைகளை விற்று ரூ. 1.2 லட்சம் சம்பாதித்த கலைஞர்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தால்…. அமைச்சர் வன்னியரசு கடும் எச்சரிக்கை!
    Featured

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தால்…. அமைச்சர் வன்னியரசு கடும் எச்சரிக்கை!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 11, 2026Updated:July 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 vanniyarasu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கல்வராயன் மலையில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வன்னிஅரசு எச்சரித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பின், செய்தியாளர்களை சந்தித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, கல்வராயன் மலையில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    மேலும், கல்வராயன் மலையில் உள்ள கீழ்தேவனூர், மேல்தேவனூர் ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று, அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தபோது, தங்களுக்கு சாலை வேண்டும், ரேஷன் கடை வேண்டும், அங்கன்வாடி மையம் வேண்டும் என, கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். அதுகுறித்து பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    தொடர்ந்து, இடைநிற்றல் இல்லாத கல்வி வேண்டும் என்ற அவசியத்தை கவனத்தில்கொண்டு, ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளாக கருதினால், இனி பாலியல் தொல்லை என்ற பிரச்சினைக்கே இடமில்லாமல் போகும் என்பதால் கல்வராயன் மலையில் உள்ள 47 தலைமை ஆசிரியர்களை வரவழைத்து, கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி, அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி இருக்கின்றோம்.

    இனிவரும் காலங்களில் மாணவிகளை கண்டிக்க வேண்டிய இடத்தில் ஆசிரியர்கள் கண்டிக்க வேண்டும். அன்பு காட்ட வேண்டிய இடத்தில் அன்பு காட்ட வேண்டும். இதை மீறி பாலியல் தொல்லை, சீண்டல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்தார்.

    மேலும், சத்தியமங்கலமாக இருக்கட்டும், சேலம் கத்தரி மலையாக இருக்கட்டும், கல்வராயன் மலையாக இருக்கட்டும் எல்லா இடங்களுக்கும் நான் சென்றுள்ளேன். இதில், கல்வராயன் மலையில் உள்ள மக்களோடு, கடந்த கால் நூற்றாண்டு காலமாக தொடர்பில் இருந்து வருகிறேன்.

    அப்போது, அன்னபிஷியலாக வந்தேன். தற்போது அபிஷியலாக வந்திருக்கிறேன். அந்த வகையில், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மக்களோடும், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மக்களோடும் நான் பழகுவது இயல்பான ஒன்றுதான்.

    கடந்த கால ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் கல்வராயன் மலை மக்களுக்காக நன்றாக செயல்பட்டு இருந்திருக்கலாம். அல்லது அதிகாரிகளிடத்தில் சொல்லி திட்டங்களை செயல்படுத்தியிருக்கலாம். ஆனால், இந்த 5 ஆண்டு காலம் நேரடியாக வருவேன் என்றார்.

    Child Safety Minister Vanniyarasu School Girls Sexual Harassment Women Safety
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்..!! கைதட்டி, விசிலடித்து ஆர்ப்பரித்த மக்கள்..!!
    Next Article We The Leaders-ன் ‘போதையில்லா பொள்ளாச்சி’ மாநாடு.. இறுதிக்கட்டத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள்..!!
    Editor TN Talks

    Related Posts

    கிருஷ்ணகிரியில் 32வது மாங்கனி கண்காட்சி… நாவில் நீர் ஊற வைத்த மாம்பழங்கள்

    July 11, 2026

    டிரம்புடன் கோல்ஃப் ; மறக்க முடியாத தருணம் – ஹாரி கேன் நெகிழ்ச்சி

    July 11, 2026

    இது புதுசா இருக்கே!. குப்பைகளை விற்று ரூ. 1.2 லட்சம் சம்பாதித்த கலைஞர்!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கிருஷ்ணகிரியில் 32வது மாங்கனி கண்காட்சி… நாவில் நீர் ஊற வைத்த மாம்பழங்கள்

    டிரம்புடன் கோல்ஃப் ; மறக்க முடியாத தருணம் – ஹாரி கேன் நெகிழ்ச்சி

    இது புதுசா இருக்கே!. குப்பைகளை விற்று ரூ. 1.2 லட்சம் சம்பாதித்த கலைஞர்!

    இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் புதிய வரலாறு ; கோலி, சச்சினால் கூட செய்ய முடியாத சாதனை!

    டாஸ்மாக் மதுபானங்களுக்கு ரூ.10 செஸ் வரி? – அரசு திடீர் முடிவு ஏன்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.