வியட்நாமின் பிரபல சுற்றுலாத் தீவான பூ குவோக் (Phu Quoc) அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோரும் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசுத் தரப்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், வியட்நாம் நாட்டின் படகு விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில், அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களோ. தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24/7 கட்டணமில்லா உதவி எண்களை தொடர்பு கொள்ளக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியாவிற்குள் 1800 309 3793 என்ற எண்ணும் வெளிநாடு
+91 80 6900 9900 (Missed Call) தொடர்புக்கு +91 80 6900 9901 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமில் ஏற்பட்ட படகு விபத்து தொடர்பாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாகவும், இது தொடர்பாக நிலமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
