Close Menu
    What's Hot

    கூடலூர்; சாலையில் திடீரென வந்த ஒற்றைக் காட்டு யானை – நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்கள்

    மாணவர்களுக்கான கல்விக் கடனை உயர்த்த முடிவு!. ரூ.3,000 கோடி இலக்கு!. அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    திருச்சி ; அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»‘குடி’மகன்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 54 புதிய மதுபானங்கள் விரைவில் அறிமுகம்.. டாஸ்மாக் முடிவு..!!
    Featured

    ‘குடி’மகன்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 54 புதிய மதுபானங்கள் விரைவில் அறிமுகம்.. டாஸ்மாக் முடிவு..!!

    editor5By editor5July 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 21 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசின் மதுவிற்பனை நிறுவனமான டாஸ்மாக், மதுப்பிரியர்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு மேலும் 54 புதிய நிறுவனங்களின் மதுபான வகைகளை படிப்படியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு மாநிலம் முழுவதும் உள்ள மதுப்பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தற்போது தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த விஸ்கி, பிராந்தி, ரம், ஒட்கா, பீர் உள்ளிட்ட பல்வேறு மதுபானங்கள் விற்பனைக்கு வருகின்றன. எனினும், இவற்றில் ஒரு சில பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மட்டுமே நிலையான வரவேற்பு கிடைக்கிறது. மற்ற பல மதுபான வகைகள் பண்டிகை காலங்கள், திருமணங்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளின்போது மட்டுமே விற்பனையாகின்றன. இதனால் பல வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பமான பிராண்டுகளை தேர்வு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

    குறிப்பாக, அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் அதிக வரவேற்பு பெற்று விற்பனையாகும் பல பிரீமியம் மதுபானங்கள் தமிழக டாஸ்மாக் கடைகளில் கிடைக்காதது மதுப்பிரியர்களிடையே நீண்டகால ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் புதிய 54 நிறுவனங்களின் பிராந்தி, விஸ்கி, பீர் உள்ளிட்ட தரமான மதுபானங்களை பல்வேறு கட்டங்களாக அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இந்த புதிய வகைகள் விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து டாஸ்மாக் மூத்த அதிகாரிகள் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளில் வாடிக்கையாளர்களின் ரசனை மற்றும் விருப்பங்கள் கணிசமாக மாறியுள்ளன. பிரீமியம் தரத்திலான மற்றும் பிரபலமான பிராண்டுகளை அவர்கள் அதிகம் கோருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளோம்.

    இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்யும் வாய்ப்பு அதிகரிக்கும்” என்றனர். இந்த நடவடிக்கை டாஸ்மாக் வருவாயை அதிகரிப்பதுடன், சட்டப்பூர்வ முறையில் மதுபானங்கள் விற்பனை செய்யும் அரசின் முயற்சிக்கு வலுசேர்க்கும் என கருதப்படுகிறது. மதுப்பிரியர்கள் இனி பல்வேறு தரமான விருப்பங்களுடன் தங்கள் தாகத்தை தணிக்க முடியும் என்பதால், இந்த அறிவிப்பு மாநிலம் முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    liquor brands Tasmac
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஊத்தங்கரை எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கு..! மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..!
    Next Article பாலிலும் கலக்கப்படும் நஞ்சு….  பாஜகவின் ஊழல் கொடூரம் – மாணிக்கம் தாகூர் பொளேர்!
    editor5

    Related Posts

    கூடலூர்; சாலையில் திடீரென வந்த ஒற்றைக் காட்டு யானை – நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்கள்

    July 17, 2026

    மாணவர்களுக்கான கல்விக் கடனை உயர்த்த முடிவு!. ரூ.3,000 கோடி இலக்கு!. அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    July 17, 2026

    திருச்சி ; அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கூடலூர்; சாலையில் திடீரென வந்த ஒற்றைக் காட்டு யானை – நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்கள்

    மாணவர்களுக்கான கல்விக் கடனை உயர்த்த முடிவு!. ரூ.3,000 கோடி இலக்கு!. அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    திருச்சி ; அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

    கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டதற்கு எதிரான வழக்கு..! தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

    கோவை: களேபரமான மாநகராட்சி மாமன்றக் கூட்டம்..!! மோதிக்கொண்ட காங்., – திமுக கவுன்சிலர்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.