Close Menu
    What's Hot

    “2006, 2017… அரசியலில் நான் செய்த இரு பெருந்தவறுகள்…” – மனம் திறந்த வைகோ

    கீழடி அகழாய்வு அறிக்கை – இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையை நாட தமிழக தொல்லியல் துறை முடிவு

    வாஸ்து சரியில்லையாம்.. ஜோசியர் கொடுத்த வார்னிங்.. அலுவலக அறையை மாற்றும் விஜய்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மாணவர்களுக்கான கல்விக் கடனை உயர்த்த முடிவு!. ரூ.3,000 கோடி இலக்கு!. அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!
    தமிழ்நாடு

    மாணவர்களுக்கான கல்விக் கடனை உயர்த்த முடிவு!. ரூ.3,000 கோடி இலக்கு!. அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    Editor web3By Editor web3July 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    minister viswanathan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கல்விக்கடன் கிடைப்பதை எளிதாக்கவும், கடன் தொகையை உயர்த்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    சென்னை சைதாப்பேட்டை கல்லூரி கல்வி இயக்ககத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், தற்போது வழங்கப்பட்டு வரும் 7.5 லட்சம் ரூபாய் வரையிலான கல்விக்கடனை மேலும் உயர்த்துவது குறித்து, முதலமைச்சர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று அவர் தெரிவித்தார்.

    நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற உயர்கல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களின் கல்விக்கடன் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வங்கிகளில் அலைக்கழிக்கப்படுவதைத் தவிர்க்கவும், அவர்களுக்குத் தகுந்த மரியாதை கிடைப்பதை உறுதி செய்யவும் முதலமைச்சர் தனிப்பட்ட அக்கறை காட்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

    கடந்த ஆண்டு சுமார் 1.02 லட்சம் மாணவர்களுக்கு 863 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு 1.50 லட்சம் மாணவர்களுக்கு 3,000 கோடி ரூபாய்க்கும் மேல் கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்விக்கடன் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமையாக்கி, தாராளமாக கடன் வழங்குவதை ஊக்குவிக்க வங்கிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

    இந்தத் திட்டத்தின் முக்கிய மாற்றமாக, மாவட்டந்தோறும் ஒரு பேராசிரியரை நோடல் அலுவலராகத் தமிழக அரசு நியமிக்க உள்ளது. இனி வங்கிகளின் நோடல் அலுவலர்களுடன் இணைந்து, இந்தப் பேராசிரியர்கள் மாணவர்களின் கல்விக்கடன் விண்ணப்பங்களைக் கவனிப்பார்கள். மாணவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, வங்கிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், எவ்விதத் தடையுமின்றி மாணவர்களுக்குக் கடன் கிடைப்பதை இந்தப் பேராசிரியர்கள் உறுதி செய்வார்கள்.

    இந்த புதிய முன்னெடுப்பின்படி, மாவட்ட வாரியாக நியமிக்கப்படவுள்ள பேராசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் தலைமையிலான குழுவினர், வங்கி அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவார்கள். எவ்வித நிதி நெருக்கடியும் இன்றி மாணவர்கள் தங்களின் உயர்கல்வியைத் தொடர வேண்டும் என்பதே முதலமைச்சரின் இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

    announcement soon cm vijay increase education loans Minister Viswanathan Students tamilnadu Target ₹3000 crore
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருச்சி ; அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு
    Next Article கூடலூர்; சாலையில் திடீரென வந்த ஒற்றைக் காட்டு யானை – நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்கள்
    Editor web3
    • Website

    Related Posts

    “2006, 2017… அரசியலில் நான் செய்த இரு பெருந்தவறுகள்…” – மனம் திறந்த வைகோ

    July 17, 2026

    கீழடி அகழாய்வு அறிக்கை – இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையை நாட தமிழக தொல்லியல் துறை முடிவு

    July 17, 2026

    வாஸ்து சரியில்லையாம்.. ஜோசியர் கொடுத்த வார்னிங்.. அலுவலக அறையை மாற்றும் விஜய்?

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “2006, 2017… அரசியலில் நான் செய்த இரு பெருந்தவறுகள்…” – மனம் திறந்த வைகோ

    கீழடி அகழாய்வு அறிக்கை – இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையை நாட தமிழக தொல்லியல் துறை முடிவு

    வாஸ்து சரியில்லையாம்.. ஜோசியர் கொடுத்த வார்னிங்.. அலுவலக அறையை மாற்றும் விஜய்?

    வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் சிறை தண்டனை!. புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

    கையில் சூலாயுதத்துடன் அம்மன் கெட் அப்பில் ஜோதிமணி… கரூரில் பரபரப்பாகும் போஸ்டர்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.