Close Menu
    What's Hot

    “2006, 2017… அரசியலில் நான் செய்த இரு பெருந்தவறுகள்…” – மனம் திறந்த வைகோ

    கீழடி அகழாய்வு அறிக்கை – இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையை நாட தமிழக தொல்லியல் துறை முடிவு

    வாஸ்து சரியில்லையாம்.. ஜோசியர் கொடுத்த வார்னிங்.. அலுவலக அறையை மாற்றும் விஜய்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திருச்சி ; அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு
    Featured

    திருச்சி ; அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 trichy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்சி அரசு மருத்துவமனையில் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, தீயணைத்துறையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.

    திருச்சி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரேகா (40). இவர் இன்று காலை திடீரென திருச்சி அரசு மருத்துவமனை பிரசவ வார்டு அருகே உள்ள உயரமான தண்ணீர் தொட்டியின் உச்சி மீது ஏறி அமர்ந்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் உடனடியாக காவல் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு, சுமார் ஒரு மணி நேர முயற்சிக்குப் பின் அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாகக் கீழே மீட்டனர். பின்னர், அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    அந்தப் பெண்ணிடம் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், தான் நகை மற்றும் பண விவகாரத்தில் ஏமாற்றப்பட்டதாகவும், சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அவற்றைப் மீட்டுத் தருமாறு கோரி, கவனத்தை ஈர்ப்பதற்காகவே அவர் இத்தகைய செயலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாகக் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    government hospital Suicide Attempt Tiruchirappalli Trichy Water Tank Woman
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டதற்கு எதிரான வழக்கு..! தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!
    Next Article மாணவர்களுக்கான கல்விக் கடனை உயர்த்த முடிவு!. ரூ.3,000 கோடி இலக்கு!. அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!
    Editor TN Talks

    Related Posts

    “2006, 2017… அரசியலில் நான் செய்த இரு பெருந்தவறுகள்…” – மனம் திறந்த வைகோ

    July 17, 2026

    கீழடி அகழாய்வு அறிக்கை – இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையை நாட தமிழக தொல்லியல் துறை முடிவு

    July 17, 2026

    வாஸ்து சரியில்லையாம்.. ஜோசியர் கொடுத்த வார்னிங்.. அலுவலக அறையை மாற்றும் விஜய்?

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “2006, 2017… அரசியலில் நான் செய்த இரு பெருந்தவறுகள்…” – மனம் திறந்த வைகோ

    கீழடி அகழாய்வு அறிக்கை – இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையை நாட தமிழக தொல்லியல் துறை முடிவு

    வாஸ்து சரியில்லையாம்.. ஜோசியர் கொடுத்த வார்னிங்.. அலுவலக அறையை மாற்றும் விஜய்?

    வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் சிறை தண்டனை!. புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

    கையில் சூலாயுதத்துடன் அம்மன் கெட் அப்பில் ஜோதிமணி… கரூரில் பரபரப்பாகும் போஸ்டர்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.