Close Menu
    What's Hot

    பிரிட்டனின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்வு!.

    இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார் ஆண்டி பர்ன்ஹாம்… தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக தேர்வு!

    சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு… குறைகளை அடுக்கிய மாணவர்கள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»‘ரெஸ்டோ பார்’… சமூகக் கட்டமைப்பையே வேரறுக்கும் ஆபத்தான நகர்வு – எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்!
    Featured

    ‘ரெஸ்டோ பார்’… சமூகக் கட்டமைப்பையே வேரறுக்கும் ஆபத்தான நகர்வு – எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    023 sdpi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உணவகத்துடன் கூடிய ‘ரெஸ்டோ பார்’ மது விற்பனைக்கு அரசு திட்டமிட்டுள்ளது,  சமூகக் கட்டமைப்பையே வேரறுக்கும் ஆபத்தான நகர்வு என எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்னும் மக்கள் கோரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பதற்குப் பதிலாக, தமிழக அரசு மது அருந்தும் பழக்கத்தை அடுத்த கட்ட நாகரிகப் பாய்ச்சலாக மாற்றத் துடிப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் உணவகங்களுடன் கூடிய மதுக்கூடங்களான ‘ரெஸ்டோ பார்’ கலாச்சாரத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தப் பரிசீலித்து வருவதாக வெளியாகும் செய்திகள், தமிழகத்தின் சமூகக் கட்டமைப்பையே வேரறுக்கும் ஆபத்தான நகர்வாகும்.

    உணவகத்தோடு மதுவை இணைப்பதன் மூலம், மது அருந்துவதை ஒரு சமூகக் குற்றமாகப் பார்க்காமல், அதை ஒரு வாழ்வியல் அங்கீகாரமாக மாற்ற அரசு துடிக்கிறது. கலாச்சாரம் என்ற பெயரில் கொண்டு வரப்படும் இந்த நடவடிக்கை, தமிழகத்தில் இன்னும் பேராபத்தான சமூகச் சீர்கேட்டையே உருவாக்கும்.

    தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் பல்வேறு கொடூர குற்றச்செயல்களுக்கு முதன்மை காரணியாகவும், ஊற்றுக்கண்ணாகவும் விளங்குவது மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் தான். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசே, குற்றச்செயல்களின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் மது போதையை ‘ரெஸ்டோ பார்’ என்ற பெயரில் மேலும் ஊக்குவிக்க முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    ஒரு கையில் மதுக்கடைகளை மூடுவதாகச் சொல்லிவிட்டு, மறு கையில் நவீனக் கடைகளைத் திறப்பது என்ன நியாயம்?

    எனவே, தமிழக மக்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும், குற்றச்செயல்களுக்கு வழிவகுக்கும் இந்த ‘ரெஸ்டோ பார்’ திட்ட யோசனையைத் தமிழக அரசு உடனடியாகக் குப்பைத் தொட்டியில் வீச வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    Alcohol Policy Liquor Policy Political Statement resto bar SDPI Social Structure Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிபர் டிரம்ப்பை கொன்றால் 10 மில்லியன் டாலர் பரிசு? ஈராக் குழுவின் அறிவிப்பால் பரபரப்பு!
    Next Article கோவை செம்மொழிப் பூங்கா ஊழல்; கடந்த ஆட்சியின் தவறு –  கே.ஏ.செங்கோட்டையன்
    Editor TN Talks

    Related Posts

    பிரிட்டனின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்வு!.

    July 17, 2026

    இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார் ஆண்டி பர்ன்ஹாம்… தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக தேர்வு!

    July 17, 2026

    சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு… குறைகளை அடுக்கிய மாணவர்கள்

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரிட்டனின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்வு!.

    இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார் ஆண்டி பர்ன்ஹாம்… தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக தேர்வு!

    சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு… குறைகளை அடுக்கிய மாணவர்கள்

    உகாண்டாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து!. 20 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி!

    பெண்கள் இட ஒதுக்கீடு; தொகுதி மறுவரையறை மசோதா!. காங்கிரஸை தனிமைப்படுத்த திட்டமிடுகிறதா மத்திய அரசு?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.