Close Menu
    What's Hot

    திருப்பூரில் குவியும் ஜனநாயகன் T-Shirts ஆர்டர்கள்!. கொண்டாட்டத்தில் பனியன் உற்பத்தியாளர்கள்!

    ”தெரு நாய் பிரச்சனையில் நடவடிக்கை இல்லையே..?”: தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி

    பரந்தூர் விமான நிலையம்:  தவெக அரசின் தற்போதைய நிலை என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ராமர் கோவில் நன்கொடை திருட்டு: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!
    Featured

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

    Editor web2By Editor web2July 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    supreme court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அயோத்தி ராமர் கோவிலின் நன்கொடை திருட்டு விவகாரத்தை அரசியல் நோக்கில் பயன்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த வழக்கை உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தபோது இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது.

    அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடை பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டதாக ஜூன் 25-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அறக்கட்டளையின் முன்னாள் ஓட்டுநர் ராமஷங்கர் மிஸ்ரா உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு, பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தனது பதவியை ராஜினாமா செய்தார். சம்பவத்தைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச அரசு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

    விசாரணையின்போது, மனுதாரர்கள் இந்த வழக்கை உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும், ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் கணக்குகளை தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

    உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஆரம்பக்கட்ட விசாரணையை SIT மேற்கொண்டதாகவும், தற்போது காவல்துறை வழக்கை விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, SIT-ஐ மூத்த அதிகாரி தலைமையில் மறுசீரமைக்க முடியுமா என்று நீதிபதிகள் அரசிடம் கேள்வி எழுப்பினர்.

    அதே நேரத்தில், “இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். விசாரணை நேர்மையாக நடைபெற்று உண்மையை வெளிக்கொணர வேண்டும்” என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் வலியுறுத்தினார். நிலை அறிக்கையை ஆய்வு செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    Ayodhya DonationTheft RamMandir supremecourt
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜப்பானுக்காக இனி காத்திருக்காது இந்தியா… புல்லட் ரயில் திட்டத்தில் புதிய பாதை!
    Next Article திமுக எம்.எல்.ஏ கைது விவகாரம்..!! இது உச்சகட்ட அடக்குமுறை..!! கொந்தளித்த உதயநிதி ஸ்டாலின்..!!
    Editor web2
    • Website

    Related Posts

    திருப்பூரில் குவியும் ஜனநாயகன் T-Shirts ஆர்டர்கள்!. கொண்டாட்டத்தில் பனியன் உற்பத்தியாளர்கள்!

    July 21, 2026

    ”தெரு நாய் பிரச்சனையில் நடவடிக்கை இல்லையே..?”: தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி

    July 21, 2026

    பரந்தூர் விமான நிலையம்:  தவெக அரசின் தற்போதைய நிலை என்ன?

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூரில் குவியும் ஜனநாயகன் T-Shirts ஆர்டர்கள்!. கொண்டாட்டத்தில் பனியன் உற்பத்தியாளர்கள்!

    ”தெரு நாய் பிரச்சனையில் நடவடிக்கை இல்லையே..?”: தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி

    பரந்தூர் விமான நிலையம்:  தவெக அரசின் தற்போதைய நிலை என்ன?

    1 வருஷமா ஸ்கூலுக்கு போகல.. 2 குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றிய சிங்கப்பெண் படை! வால்பாறையில் நெகிழ்ச்சி சம்பவம்!

    பிரதமர் இல்லம் முன்பு தடுத்து நிறுத்தம் –  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தர்ணா

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.