Close Menu
    What's Hot

    தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!

    காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் ஏன் இடம்பெறவில்லை?.

    ”நீட் போராட்டம்: பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்கு  பரிசு லத்திகளா?” – கமல்ஹாசன் காட்டம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உலகம் மிகுந்த பதற்றமான சூழலில் உள்ளது; இந்தியா–ஆசியான் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஜெய்சங்கர் வலியுறுத்தல்
    Featured

    உலகம் மிகுந்த பதற்றமான சூழலில் உள்ளது; இந்தியா–ஆசியான் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஜெய்சங்கர் வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 jayshankar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலகம் தற்போது மிகவும் பதற்றமான மற்றும் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதால், எந்த ஒரு நாடோ அல்லது ஒரு கூட்டமைப்போ தனித்து இந்த சவால்களை சமாளிக்க முடியாது என்று கூறியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியா மற்றும் ஆசியான் (ASEAN) நாடுகள் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தியுள்ளார்.

    பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறும் குவாட் (Quad) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் மற்றும் ஆசியான் (ASEAN) அமைப்பின் அமைச்சரவை மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார்.

    அங்கு நடைபெற்ற இந்தியா–ஆசியான் 2026 பிந்தைய அமைச்சரவை மாநாட்டில் (ASEAN Post-Ministerial Conference with India 2026) தொடக்க உரையாற்றிய அவர், இந்தாண்டின் மாநாட்டு கருப்பொருளான “Navigating Our Future Together” (நமது எதிர்காலத்தை ஒன்றாக வழிநடத்துவோம்) என்பது தற்போதைய உலகச் சூழ்நிலையை மிகத் துல்லியமாக பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.

    001 jayshankar A

    “உலகம் மிகவும் பதற்றமான காலகட்டத்தை எதிர்கொள்கிறது. எந்த ஒரு நாடோ அல்லது ஒரு கூட்டமைப்போ தனித்து அனைத்து சவால்களையும் சமாளிக்க முடியாது என்பது இன்று தெளிவாகியுள்ளது. எனவே, பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவது காலத்தின் தேவை,” என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.

    மேலும், இந்தியா–ஆசியான் முழுமையான மூலோபாய கூட்டாண்மையை (Comprehensive Strategic Partnership) மேலும் வலுப்படுத்துவதில், ஆசியானுக்கான நாட்டு ஒருங்கிணைப்பாளராக (Country Coordinator) செயல்பட்டு வரும் பிலிப்பைன்ஸ் முக்கிய பங்காற்றி வருவதை அவர் பாராட்டினார்.

    இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கிடையேயான பொருளாதாரம், பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பிராந்திய நிலைத்தன்மை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.

    ASEAN Cooperation Global Geopolitics India-ASEAN Relations Indo-Pacific S Jaishankar
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!
    Next Article புகைப்படத்தால் நேர்ந்த விபரீதம்…  உலக சைக்கிள் பயணம் மேற்கொண்ட பெண் விபத்தில் சிக்கி படுகாயம்!
    Editor TN Talks

    Related Posts

    தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!

    July 23, 2026

    காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் ஏன் இடம்பெறவில்லை?.

    July 23, 2026

    ”நீட் போராட்டம்: பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்கு  பரிசு லத்திகளா?” – கமல்ஹாசன் காட்டம்

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!

    காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் ஏன் இடம்பெறவில்லை?.

    ”நீட் போராட்டம்: பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்கு  பரிசு லத்திகளா?” – கமல்ஹாசன் காட்டம்

    வெளியான ஜனநாயகன்….. காலியான தலைமைச் செயலகம்!

    ஜாமீன் கோரி திமுக எம்.எல்.ஏ மனு… 27ஆம் தேதி விசாரணை – பதில் அளிக்க காவல் துறைக்கு உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.