Close Menu
    What's Hot

    சென்னை; அண்ணா சதுக்கத்தில் ரூ.78 லட்சத்தில் ஏ.சி வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் – மாநகராட்சி டெண்டர் வெளியீடு  

    எங்க நாட்டுக்கு சிக்னலே தேவயில்ல..! இந்தியாவுக்கு பக்கத்தில் இப்படி ஒரு நாடா? 

    டெல்லியில் வெடிக்கும் மெரினா புரட்சி!. மாணவர்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பெங்களூருவிலிருந்து கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்தல்!. கோவையில் 5 பேர் கும்பல் கூண்டோடு கைது!
    Featured

    பெங்களூருவிலிருந்து கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்தல்!. கோவையில் 5 பேர் கும்பல் கூண்டோடு கைது!

    Editor web3By Editor web3July 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Drug smuggling
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெங்களூருவில் இருந்து கேரளாவுக்குச் சொகுசு காரில் கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான 70 கிராம் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருளை கோவை மாவட்ட காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக 5 பேர் கொண்ட கும்பல் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது.

    கோவையில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாகத் தடுப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் K. ரெட்டி உத்தரவின்பேரில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ரகசியத் தகவலின் அடிப்படையில் கருமத்தம்பட்டி மேம்பாலப் பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர வாகனத் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்துச் சோதனையிட்டதில், காரின் மறைவான பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 கிராம் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் சிக்கியது. உடனே காரையும் போதைப்பொருளையும் பறிமுதல் செய்த போலீசார், பாலக்காடு மற்றும் கோவையைச் சேர்ந்த அஜ்மல், அபுதாஹிர், பாலாஜி, முகமது அலி ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.

    இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களது முக்கியக் கூட்டாளியான திருச்சூரைச் சேர்ந்த ஜசீர் (30) என்பவர்தான் பெங்களூருவில் போதைப்பொருளை வாங்கிவரச் செய்து கேரளாவுக்குக் கடத்தத் திட்டமிட்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த ஜசீீரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். பெங்களூரு, கேரளா மற்றும் தமிழகம் வரை நீண்டிருந்த இந்தப் போதைப்பொருள் கடத்தல் வலையைத் தகர்த்துள்ள காவல்துறையினர், இவர்களுடன் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Bengaluru to Kerala Drug Smuggling kovai member gang arrested
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும்’ – கே.சி. வேணுகோபால் எம்.பி வலியுறுத்தல்
    Next Article ”மாணவர்களின் போராட்டமல்ல, நாடாளுமன்றத்திலும் மாணவர்களிடமும் நடப்பதுதான் ஜனநாயக விரோதம்” – பிரியங்கா காந்தி கடும் தாக்கு  
    Editor web3
    • Website

    Related Posts

    சென்னை; அண்ணா சதுக்கத்தில் ரூ.78 லட்சத்தில் ஏ.சி வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் – மாநகராட்சி டெண்டர் வெளியீடு  

    July 22, 2026

    எங்க நாட்டுக்கு சிக்னலே தேவயில்ல..! இந்தியாவுக்கு பக்கத்தில் இப்படி ஒரு நாடா? 

    July 22, 2026

    டெல்லியில் வெடிக்கும் மெரினா புரட்சி!. மாணவர்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா?

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை; அண்ணா சதுக்கத்தில் ரூ.78 லட்சத்தில் ஏ.சி வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் – மாநகராட்சி டெண்டர் வெளியீடு  

    எங்க நாட்டுக்கு சிக்னலே தேவயில்ல..! இந்தியாவுக்கு பக்கத்தில் இப்படி ஒரு நாடா? 

    டெல்லியில் வெடிக்கும் மெரினா புரட்சி!. மாணவர்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா?

    டெல்லி போராட்டத்துக்கு தவெக ஆதரவு; ராகுல் கைதுக்கு விஜய் கண்டனம்

    நேற்று தொடங்கிய ED ரெய்டு.. இன்று அதிரடி நிறைவு..!! முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.