மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியில் நீடிக்க தார்மீக அடிப்படை இல்லை என்றும், நாட்டின் குழந்தைகளின் நலனை பாதுகாக்க அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராக தொடர்ந்து பதவி வகிக்க எந்த தார்மீக பொறுப்பும் இல்லை. இனி அவர் கூறும் வார்த்தைகளை யார் நம்புவார்கள்? அவரது தார்மீக பொறுப்பு எங்கே?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “180 கோடி மக்கள் அவரது பதவி விலகலைக் கோருகின்றனர். இந்த நாட்டின் குழந்தைகளின் எதிர்காலத்தையும் நலனையும் பாதுகாக்க அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
