Close Menu
    What's Hot

    ஓசூர்: கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் கலக்கும் ரசாயன கழிவு நீர்…. அமைச்சர் கீர்த்தனா  ஆய்வு!

    ட்ரோனில் கொண்டு செல்லப்பட்ட பச்சைத் தேயிலை… சோதனை முயற்சி வெற்றி

    மெட்ரோ ரயில் பணிகள்: சென்னை நந்தனம், கத்திப்பாராவில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மேகதாது அணை… கீழ்நிலை மாநிலங்களின் ஒப்புதல் அவசியம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம்…
    Featured

    மேகதாது அணை… கீழ்நிலை மாநிலங்களின் ஒப்புதல் அவசியம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 vijay modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்தக் கடிதத்தில், மாநிலங்களவையில் மேகதாது அணை தொடர்பாக மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் இணை அமைச்சர் அளித்த பதிலை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், 2018 பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே எந்தக் கட்டுமானத்தையும் மேற்கொள்வதற்கு கீழ்நிலை மாநிலங்களின் (Lower Riparian States) ஒப்புதல் அவசியம் என்று வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை என்ற அமைச்சரின் விளக்கம் ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த பதில் தற்போதுள்ள சட்ட நிலை மற்றும் கீழ்நிலை மாநிலங்களின் ஒப்புதல் தொடர்பான நிலைநிறுத்தப்பட்ட சட்டக் கோட்பாடுகளை கருத்தில் கொள்ளாமல் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக, கர்நாடகா – ஆந்திரப் பிரதேசம் இடையேயான அலமட்டி அணை வழக்கில் (State of Karnataka vs State of Andhra Pradesh) அரசியல் சாசன அமர்வு வழங்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை முதலமைச்சர் மேற்கோள் காட்டியுள்ளார்.

    அந்தத் தீர்ப்பின் 100-வது பத்தியில், “கீழ்நிலை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதலும், மத்திய அரசின் அனுமதியும் இல்லாமல் கர்நாடக மாநிலம் குறிப்பிட்ட உயரம் வரை அணை கட்ட அனுமதிக்க முடியாது” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    அதேபோல், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள XVIII-வது பிரிவை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது என்றும், அதன்படி ஒவ்வொரு மாநிலமும் தன் எல்லைக்குள் நீரை நிர்வகிக்கலாம் என்றாலும், அது நடுவர் மன்றத்தின் உத்தரவுக்கு முரணாக இருக்கக் கூடாது என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    எனவே, காவிரி நீரின் ஒழுங்குபடுத்தப்பட்ட ஓட்டத்தை பாதிக்கும் வகையிலான எந்த புதிய திட்டமும், குறிப்பாக மேகதாது அணைத் திட்டமும், தமிழ்நாடு உள்ளிட்ட கீழ்நிலை மாநிலங்களின் உரிமைகள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதித்து மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

    C Joseph Vijay Cauvery Water Dispute Mekedatu Dam Narendra Modi Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
    Next Article டெல்லியில் கர்நாடக எம்.பி.க்களுடன் சந்திப்பு…. மிகப்பெரிய வெற்றி என முதல்வர் டி.கே. சிவக்குமார் பெருமிதம்
    Editor TN Talks

    Related Posts

    ஓசூர்: கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் கலக்கும் ரசாயன கழிவு நீர்…. அமைச்சர் கீர்த்தனா  ஆய்வு!

    July 29, 2026

    ட்ரோனில் கொண்டு செல்லப்பட்ட பச்சைத் தேயிலை… சோதனை முயற்சி வெற்றி

    July 29, 2026

    மெட்ரோ ரயில் பணிகள்: சென்னை நந்தனம், கத்திப்பாராவில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓசூர்: கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் கலக்கும் ரசாயன கழிவு நீர்…. அமைச்சர் கீர்த்தனா  ஆய்வு!

    ட்ரோனில் கொண்டு செல்லப்பட்ட பச்சைத் தேயிலை… சோதனை முயற்சி வெற்றி

    மெட்ரோ ரயில் பணிகள்: சென்னை நந்தனம், கத்திப்பாராவில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    சன் நெட்வொர்க்குக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்… ஏன் தெரியுமா?

    திமுகவுடன் இணைந்து போராட தயார் – பச்சைக் கொடி காட்டும் செங்கொடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.