Close Menu
    What's Hot

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    பாரதிராஜா – பாக்கியராஜுக்கு பிரம்மாண்ட அஞ்சலி: ஆகஸ்ட் 16-ல் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’

    கோவில் விழாக்களில் யானைகள் பயன்பாடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“தேவையென்றால் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்!” – கவிஞர் வைரமுத்து பேச்சு
    Featured

    “தேவையென்றால் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்!” – கவிஞர் வைரமுத்து பேச்சு

    Editor web2By Editor web2August 1, 2026Updated:August 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 08 01 17h13m35s766
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது கவலைக்குரியது என்றும், தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளை அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்துவது அரசின் முதல் கடமை என்றும் கவிஞர் வைரமுத்து வலியுறுத்தி உள்ளார்.

    மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற வெற்றி தமிழர் பேரவையின் முதலாம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களை குறிப்பிட்டு உரையாற்றினார்.

    அரசுப் பள்ளிகளுக்கு அதிக கவனம் தேவை

    “மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மேடைக்கு வந்து பரிசு பெற்றபோது, இவர்கள்தான் நம் உறவினர்கள், இவர்களின் பெற்றோர்கள்தான் நம் பங்காளிகள் என்று நினைக்கிறேன். பணக்காரர்களுக்கு மாஸ்கோ இருக்கிறது, டெல்லி இருக்கிறது, சென்னை இருக்கிறது. ஆனால் கல்விக் கட்டணம் கூட செலுத்த முடியாத ஏழை, எளிய மக்கள் மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளையே நம்பியிருக்கிறார்கள்.

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இந்த ஆண்டு வெளியான புள்ளிவிவரங்களின்படி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சடசடவென்று குறைந்திருக்கிறது என்று தகவல் வருகிறது. அது சரியக் கூடாது.

    vlcsnap 2026 08 01 17h13m23s446

    தனியார் பள்ளிகளில் உள்ள கல்வித் தரம், சுற்றுச்சூழல், சுகாதார வசதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான பாதுகாப்பு போன்ற அனைத்து வசதிகளையும் அரசுப் பள்ளிகளிலும் மாநகராட்சி பள்ளிகளிலும் ஏற்படுத்திக் கொடுப்பதே ஒரு ஆட்சியின் முதல் கடமை” என்று அவர் கூறினார்.

    “தாய்மொழி கண்; பிறமொழி கண்ணாடி”

    பிறமொழி கற்பது குறித்து பேசிய அவர்,”நீங்கள் எந்த மொழியையும் கற்றுக்கொள்ள உரிமை உண்டு. ஆனால் முதலில் தாய்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கடமை இருக்கிறது. தாய்மொழிக்கும் பிறமொழிக்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா? தாய்மொழி என்பது கண் போன்றது; பிறமொழி என்பது கண்ணுக்கு அணியும் கண்ணாடி போன்றது.

    கண் இல்லையென்றால் கண்ணாடி எதற்கு? முதலில் கண் என்ற தாய்மொழி இருக்கட்டும். அதன் பிறகு ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன், பிரெஞ்சு என எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம்” என்று விளக்கினார்.

    “தேவை வரும்போது இந்தி கற்றுக்கொள்ளுங்கள்”

    vlcsnap 2026 08 01 17h13m03s181

    இந்தி மொழி குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அவர், “இந்தியும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேவை இருந்தால் கற்றுக்கொள்ளுங்கள். இதை நான் மிகவும் தெளிவாகச் சொல்கிறேன்.

    ஏன் சொல்கிறேன் தெரியுமா? அசாம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து வேலை தேடி தமிழ்நாட்டுக்கு பலர் வருகிறார்கள். அவர்கள் முதலில் தங்கள் தாய்மொழியை மட்டுமே தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.

    ஆனால் இரண்டு ஆண்டுகளில் நம்மோடு பழகி, தமிழ் பேசத் தொடங்கிவிடுகிறார்கள். அவர்களுக்கு தமிழ் யார் கற்றுக் கொடுத்தார்கள்? யாராவது வகுப்பு எடுத்தார்களா? காலம்தான் அவர்களுக்கு தமிழைக் கற்றுக்கொடுத்தது.

    அதேபோல தமிழர்கள் வேறு மாநிலங்களுக்கு சென்றால், அந்தந்த மாநில மொழிகளை காலமே அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும். எனவே பிறமொழிகளை காலத்தின் கைகளில் விட்டுவிடுங்கள்” என்றார்.

    HindiDebate TamilLanguage tamilnadu vairamuthu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரசிகர் மன்ற நிர்வாகி குழந்தைகளின் முழு கல்விச் செலவு – நடிகர் தனுஷ் ஏற்றார்
    Next Article வழக்குகள் போடுவதிலேயே தவெக அரசு கவனம் செலுத்துகிறது…. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு
    Editor web2
    • Website

    Related Posts

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    August 1, 2026

    பாரதிராஜா – பாக்கியராஜுக்கு பிரம்மாண்ட அஞ்சலி: ஆகஸ்ட் 16-ல் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’

    August 1, 2026

    கோவில் விழாக்களில் யானைகள் பயன்பாடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    பாரதிராஜா – பாக்கியராஜுக்கு பிரம்மாண்ட அஞ்சலி: ஆகஸ்ட் 16-ல் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’

    கோவில் விழாக்களில் யானைகள் பயன்பாடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    விராலிமலை, கரூர் இடைத்தேர்தல் தடையை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

    மொராக்கோவில் இருந்து சியூட்டாவுக்குள் ஆயிரக்கணக்கானோர் நுழைவு… உயிரிழப்பு 67 ஆக உயர்வு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.