Close Menu
    What's Hot

    100% தூய்மையானதா?. தேன், நெய், எண்ணெய் விற்பனை செய்ய டாபர் நிறுவனதுக்கு தடை!. FSSAI அதிரடி!

    உதயநிதி ஸ்டாலின் பேச்சு சர்ச்சை: “அரசியலில் பெண்களை இழுப்பதை நிறுத்த வேண்டும்” – பாடகி சின்மயி கண்டனம்

    எதிர்க்கட்சித் தலைவரை வலுக்கட்டாயமாக கைது செய்வதா? – எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அப்பாவுக்கு பதவி உயர்வா? அனிதா ராதாகிருஷ்ணனுடன் மோதலா? திமுகவில் அடுத்த கட்ட நகர்வு!
    Featured

    அப்பாவுக்கு பதவி உயர்வா? அனிதா ராதாகிருஷ்ணனுடன் மோதலா? திமுகவில் அடுத்த கட்ட நகர்வு!

    editor5By editor5August 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 25
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுகவில் தென்மண்டல துணைப் பொதுச்செயலாளர் பதவி குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. கட்சித் தலைமை, தென் மண்டலத்திலிருந்து ஒருவர் தேர்வு செய்யப்பட்டால் அந்தப் பொறுப்பை முன்னாள் சபாநாயகர் அப்பாவுவுக்கு வழங்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திருச்செந்தூர் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கடும் அதிருப்தியில் உள்ளார்.

    கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததிற்குப் பிறகு திமுகவில் மறுசீரமைப்புப் பணிகள் வேகமெடுத்துள்ளன. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட மறுசீரமைப்பு ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. செப்டம்பர் மாத முப்பெரும் விழாவுக்குப் பின்னர் மாவட்டச் செயலாளர் பதவிகள் உள்ளிட்ட நிர்வாக மாற்றங்கள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

    துணைப் பொதுச்செயலாளர் பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டமும் ஸ்டாலின் மனதில் உள்ளது. இதன் மூலம் தென்மண்டலத்திற்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழியுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிகிறது. அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த இரண்டு மாதங்களாக இந்தப் பதவியை இலக்காகக் கொண்டு தீவிரமாகப் பேசி வந்தார்.

    தூத்துக்குடி மாவட்ட அரசியலை முழுமையாகக் கையில் எடுக்கும் நோக்கமும் அவரிடம் இருந்தது. அதே சமயம் தூத்துக்குடி மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டால் அதன் பொறுப்பைப் பிடிக்க மார்க்கண்டேயன் முயற்சித்தார். சில சர்ச்சைக்குரிய கருத்துகளால் சிறைக்குச் சென்ற அவர், முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனை ஓரங்கட்டும் முயற்சியிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

    எனினும் கனிமொழி அப்பாவுவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், உதயநிதி ஸ்டாலினும் அதே நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இதனால் தூத்துக்குடி மாவட்ட அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் பணிகளை அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையின் அறிவுறுத்தலின்படி மேற்கொண்டு வருகிறார்.

    கடைசி நேரத்தில் அவருக்கு ஏதேனும் பொறுப்பு வழங்கப்படுமா என்ற குழப்பமும் நிலவுகிறது. கட்சி மறுசீரமைப்பு முடிவுகள் வெளியாகும்போது தென்மண்டல அரசியல் சமன்பாடுகள் எவ்வாறு மாறும் என்பதை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

    Appavu DMK Kanimozhi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleத்ரிஷா குறித்து இரட்டை அர்த்தப் பேச்சு… உதயநிதியை கைது செய்யத் திட்டமா?… வீட்டை முற்றுகையிட்டுள்ள காவல் துறை…
    Next Article எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது…நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தப் பேச்சில் காவல் துறை நடவடிக்கை
    editor5

    Related Posts

    100% தூய்மையானதா?. தேன், நெய், எண்ணெய் விற்பனை செய்ய டாபர் நிறுவனதுக்கு தடை!. FSSAI அதிரடி!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் பேச்சு சர்ச்சை: “அரசியலில் பெண்களை இழுப்பதை நிறுத்த வேண்டும்” – பாடகி சின்மயி கண்டனம்

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவரை வலுக்கட்டாயமாக கைது செய்வதா? – எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    100% தூய்மையானதா?. தேன், நெய், எண்ணெய் விற்பனை செய்ய டாபர் நிறுவனதுக்கு தடை!. FSSAI அதிரடி!

    உதயநிதி ஸ்டாலின் பேச்சு சர்ச்சை: “அரசியலில் பெண்களை இழுப்பதை நிறுத்த வேண்டும்” – பாடகி சின்மயி கண்டனம்

    எதிர்க்கட்சித் தலைவரை வலுக்கட்டாயமாக கைது செய்வதா? – எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    உதயநிதி கைது… மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

    அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம்..! பலி எண்ணிக்கை அதிகரிப்பு..! 1.3லட்சம் பேர் பாதிப்பு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.