தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கு உரிய மற்றும் நியாயமான நிதிப் பகிர்வை வழங்கக் கோரும் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் அவை கூடியதும், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அமைச்சர் மரிய வில்சன் இந்தச் சிறப்புத் தீர்மானத்தைச் சபையில் முன்மொழிந்தார்.
அப்போது பேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி மற்றும் சிறந்த நிதி மேலாண்மை ஆகியவற்றில் தமிழ்நாடு தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருவதாகத் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு வசூலிக்கும் வரிகளுக்கு நமது மாநிலத்தின் பங்களிப்பு மிக அதிகமாக இருப்பதால், மாநிலங்கள் தங்கள் பொறுப்புகளைத் திறம்படச் செயல்படுத்த நியாயமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிதிப் பகிர்வுத் தீர்மானத்திற்கு ஆளுங்கட்சியான தவெகவுடன் இணைந்து, எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதிமுக ஆகியவையும் தங்களது முழு ஆதரவைத் தெரிவித்தன. அனைத்துக் கட்சிகளின் ஒருமனதான ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, இந்தத் தீர்மானம் சட்டப்பேரவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
