Close Menu
    What's Hot

    கால்நடை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வேண்டாம்!. பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    மாதம் ரூ.2,500 எங்கே.?. எங்களிடம் எல்லோரும் கேட்கிறார்கள்?. பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார்!.

    பதவி விலகிய பசவராஜ் ஹொரட்டி.. ‘ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டது’ என பரபரப்பு பேட்டி!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப் பெறுவது சவாலாக உள்ளது” – அமைச்சர் ஆனந்த்
    Featured

    “கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப் பெறுவது சவாலாக உள்ளது” – அமைச்சர் ஆனந்த்

    Editor web2By Editor web2August 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Pussy Anand
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மூலம் தமிழகத்தின் உரிமை உறுதி செய்யப்பட்டிருந்தாலும், கர்நாடகாவிடமிருந்து மாதந்தோறும் உரிய அளவு நீரைப் பெறுவது தொடர்ந்து சவாலாக இருந்து வருவதாக அவர் கூறினார்.
    நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

    சட்டப்பேரவையில் காவிரி மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர், காவிரி நீர் டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்கும், பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கும் உயிர்நாடியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மூலம் தமிழகத்தின் உரிமை உறுதி செய்யப்பட்டிருந்தாலும், கர்நாடகாவிடமிருந்து மாதந்தோறும் உரிய அளவு நீரைப் பெறுவது தொடர்ந்து சவாலாக இருந்து வருவதாக அவர் கூறினார்.

    காவிரி நீர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்வந்ததாகவும், ஆகஸ்ட் 3-ஆம் தேதி சந்திப்பு நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கர்நாடக தரப்பின் வேண்டுகோளின் பேரில் அது ஒத்திவைக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    ஜூலை 28-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு தனது உரிமையை வலியுறுத்தியதைத் தொடர்ந்து, ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 12 வரை வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் மொத்தம் 4.536 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு திறந்து விடுமாறு காவிரி ஒழுங்காற்று ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டதாக அவர் கூறினார். பின்னர் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டமும் அந்த உத்தரவை உறுதி செய்ததாக குறிப்பிட்டார்.

    எனினும், கர்நாடக அரசு முழுமையாக உத்தரவை செயல்படுத்தவில்லை என்றும், 3,500 கனஅடி கிடைக்க வேண்டிய நிலையில் 144 முதல் 619 கனஅடி வரை மட்டுமே தமிழகத்திற்கு வந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதனால் தமிழகத்திற்கு ஏற்பட்ட நீர்பற்றாக்குறை மேலும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

    இதையடுத்து, நிலுவையில் உள்ள நீரையும் உடனடியாக திறந்துவிடவும், ஆகஸ்ட் 12-க்குள் மொத்தம் 26.594 டி.எம்.சி. நீர் கிடைப்பதை உறுதி செய்யவும் காவிரி மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதற்காக தமிழக அரசு உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    தென்மேற்கு பருவமழை தாமதம் மற்றும் கர்நாடக அணைகளுக்கான குறைந்த நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படவில்லை என்றும், தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையிலும் ஆகஸ்ட் 6 நிலவரப்படி தமிழகத்திற்கு கிடைத்த மொத்த நீர் 4.947 டி.எம்.சி. மட்டுமே என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய அளவுடன் ஒப்பிடுகையில் 41.412 டி.எம்.சி. பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரங்களில் பிரதமருக்கு தமிழக முதல்வர் இரண்டு முறை கடிதம் எழுதியிருப்பதுடன், அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தமிழ்நாட்டின் நீர் உரிமையை பாதுகாக்க தவெக அரசு தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.

    CauveryDispute karnataka tamilnadu WaterResources
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇனிப்புக்கு கசப்பான செய்தி.. சர்க்கரை விலை குறைய இன்னும் 3 மாதங்கள் ஆகுமா?
    Next Article திட்டங்களின் பெயர் மாற்றம் காலம் காலமாக நடப்பதுதான்!. தொல். திருமாவளவன்!
    Editor web2
    • Website

    Related Posts

    கால்நடை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வேண்டாம்!. பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    August 7, 2026

    மாதம் ரூ.2,500 எங்கே.?. எங்களிடம் எல்லோரும் கேட்கிறார்கள்?. பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார்!.

    August 7, 2026

    பதவி விலகிய பசவராஜ் ஹொரட்டி.. ‘ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டது’ என பரபரப்பு பேட்டி!!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கால்நடை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வேண்டாம்!. பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    மாதம் ரூ.2,500 எங்கே.?. எங்களிடம் எல்லோரும் கேட்கிறார்கள்?. பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார்!.

    பதவி விலகிய பசவராஜ் ஹொரட்டி.. ‘ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டது’ என பரபரப்பு பேட்டி!!

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    சமூகநீதி, மனிதநேயத்துக்கு எதிராக தவெக அரசின் அணுகுமுறை ஆபத்தானது!. அன்புமணி சாடல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.