Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“ஆட்சியின் செயலற்ற தன்மை”: ஊராட்சித் தலைவர் தாக்குதல் சிபிசிஐடிக்கு மாற்றம்!
    தமிழ்நாடு

    “ஆட்சியின் செயலற்ற தன்மை”: ஊராட்சித் தலைவர் தாக்குதல் சிபிசிஐடிக்கு மாற்றம்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 5 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காளையார்கோவில் அருகேயுள்ள மாரந்தை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த திருவாசகம் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்ட வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

    திருவாசகம் தாக்கல் செய்த மனுவில், 2021 உள்ளாட்சித் தேர்தலில் மாரந்தை ஊராட்சி மன்றத் தலைவராக தான் வெற்றி பெற்றதாகவும், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வரதராஜன் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்தத் தோல்வி காரணமாக, வரதராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை மற்றும் தனது குடும்பத்தினரை பலமுறை தாக்கியதாகவும், இது குறித்து காளையார்கோவில் காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

    கடந்த மே மாதம் மீண்டும் தாக்குதல் நடந்ததாகவும், அப்போதும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் திருவாசகம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது உயிருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் கூறி, வழக்கை சிபிசிபிசிஐடிக்கு மாற்றுமாறு கோரியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, “மனுதாரர் ஒரு பஞ்சாயத்துத் தலைவர். பஞ்சாயத்துத் தலைவரின் புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது நிர்வாகத்தின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது. மனுதாரர் சுமத்திய குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்டு, பொருத்தமான தீர்வு காண வேண்டியது அவசியம்” என்று கூறி, மாரந்தை கிராம ஊராட்சித் தலைவராக இருந்த திருவாசகம் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

    tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅட்லி – அல்லு அர்ஜுன் இணையும் டைம் டிராவல் படம்… தலைப்பு என்ன தெரியுமா?
    Next Article சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யக் கோரி அன்புமணி இராமதாஸ் கடிதம்!
    Editor TN Talks

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.