Close Menu
    What's Hot

    நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மசோதாக்கள், அரசியல் மோதல்கள் என அனல் பறக்கும் அமர்வு

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சிறப்புக் கட்டுரைகள்»மாறும் மாஞ்சோலை… எஸ்டேட் அடையாளங்கள் அழிப்பு; மீண்டும் காடாகும் மலைப்பகுதி!
    சிறப்புக் கட்டுரைகள்

    மாறும் மாஞ்சோலை… எஸ்டேட் அடையாளங்கள் அழிப்பு; மீண்டும் காடாகும் மலைப்பகுதி!

    Editor web2By Editor web2July 19, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 19 12h43m16s258
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை என்ற பகுதியில் தனியார் தேயிலை எஸ்டேட் செயல்பட்டு வந்தது சுமார் 96 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

    இந்த வனப்பகுதி 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிங்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்தது.1929 ஆம் ஆண்டு முதல் 2028 ஆண்டு வரை 100 ஆண்டுகள் இங்கு தேயிலை எஸ்டேட் அமைக்க மும்பையை சேர்ந்த பிபிடிசி என்ற தனியார் நிறுவனத்துக்கு ஜமீன் குத்தகைக்கு நிலம் வழங்கினார்.

    இதையடுத்து பிபிடிசி நிறுவனம் மாஞ்சோலை மற்றும் அருகில் உள்ள ஊத்து நாலுமுக்கு காக்காச்சி ஆகிய இடங்களில் தேயிலை எஸ்டேட்டை உருவாக்கி தொழிலாளர்களை பணியமர்த்தியது. ஆரம்பத்தில் இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்தனர்

    நாளடைவில் சிங்கம்பட்டி ஜமீன் உயிரிழந்தார். பின்னாளில் நாடு முழுவதும் ஜமீன் முறை ஒழிக்கப்பட்டு ஜமீன்களுக்கு சொந்தமான நீலங்கள் கையகப்படுத்தப்பட்டாலும் கூட மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை அரசு கையகப்படுத்தாமல் தொடர்ந்து எஸ்டேட் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

    vlcsnap 2026 07 19 12h42m17s373

    நீதிமன்ற உத்தரவு

    அதேசமயம் வனத்துறையின் முழு கண்காணிப்பில் தான் மாஞ்சோலை இருந்தது. இதற்கிடையில் 2028 ஆம் ஆண்டுடன் குத்தகை காலம் முடிவடைய இருக்கும் சூழலில், அதற்கு முன்பாகவே எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கட்டிட இடர்பாடுகள் உட்பட எந்த இடையூறும் இல்லாமல் ஏற்கனவே இருந்ததைப் போன்று முழு காடாக மாஞ்சோலை எஸ்டேட்டை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் பிபிடிசி நிறுவனத்திற்கு அறிவுறுத்தியிருந்தது.

    எனவே, கட்டிடங்களை அகற்றுவது தொழிலாளர்கள் குடியிருப்புகளை காலி செய்வது உள்ளிட்ட பணிகள் இருப்பதால், முன்னதாகவே அதாவது 2024 ஆம் ஆண்டே பிபிடிசி நிறுவனம் மாஞ்சோலையில் தேயிலை உற்பத்தியை நிறுத்தியது. இதன் காரணமாக, இங்கு பணிபுரிந்து வந்த சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்தனர். அவர்களுக்கு நிறுவனம் கட்டாய விருப்ப ஓய்வு வழங்கி அதற்கான பணபலன்களையும் கொடுத்தது.

    ஆனால், மூன்று தலைமுறைகளாக ரம்மியமான இந்த காட்டில் வசித்து வந்த தொழிலாளர்கள் மாஞ்சோலையை விட்டும் எஸ்டேட்டை விட்டுப் பிரிய மனமில்லாமல் குடியிருப்புகளை காலி செய்ய மறுத்தனர். பின்னர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கீழே குடிபெயர்ந்தனர். ஆனாலும், இன்னும் சுமார் 30 பேர் குடியிருப்புகளை காலி செய்யாமல தொடர்ந்து எஸ்டேட் பகுதியிலேயே வசிக்கின்றனர்.

    vlcsnap 2026 07 19 13h06m52s584

    வனத்துறை வசம் வந்த மாஞ்சோலை

    இதனால், தமிழக அரசுக்கும் வனத்துறைக்கும் பெரும் தலைவலி ஏற்பட்டது. ஒருபுறம் எஸ்டேட் தேயிலை உற்பத்தி நிறுத்தியதால் மாஞ்சோலை தேயிலை ஸ்டேட் களை இழந்தது. இது போன்ற சூழலில் தான் பிபிடிசி நிறுவனத்திடம் இருந்த 8373.57 ஏக்கர் நிலமும் ஒட்டுமொத்தமாக சமீபத்தில் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அதாவது சிங்கம்பட்டி ஜமீன் மொத்தம் 8373.57 ஏக்கர் நிலத்தை 1929 ஆம் ஆண்டு பிபிடி சி நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கினார். அதில், 8152.13 ஏக்கர் நிலத்தை கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் பிபிடிசி நிறுவனம் வனத்துறையிடம் ஒப்படைத்தது.

    இருப்பினும், மீதமுள்ள 221.41 ஏக்கர் நிலத்தில் தேயிலை தொழிற்சாலை கட்டிடங்கள் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டிடங்கள் போன்றவை இருந்ததால், அந்த நிலங்களை ஒப்படைக்காமல் இருந்தது. இந்நிலையில் தான், சமீபத்தில் மீதமுள்ள 221.44 ஏக்கர் நிலத்தையும் வனத்துறையிடம் பிபிடிசி நிறுவனம் ஒப்படைத்தது. இதன் மூலம், மாஞ்சோலை ஊத்து நாலுமுக்கு ஆகிய எஸ்டேட் பகுதிகள் ஒட்டுமொத்தமாக வனத்துறை வசம் வந்துள்ளது.

    அகற்றப்பட்ட பெயர் பலகைகள்

    இதனால், மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் இருந்ததற்கான அடையாளங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, தேயிலை எஸ்டேட் நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியது முதல் மாஞ்சோலை ஊத்து நாலுமுக்கு போன்ற பகுதியில் இருந்த தொழிற்சாலை கட்டிடங்கள் இடிக்கும் பணிகள் தொடங்கியது. தற்போது எஸ்டேட் நிறுவனம் தனது வசம் இருந்த நிலங்கள் அனைத்தையும் ஒப்படைத்துள்ளதால், அங்கு பிபிடிசி நிறுவனம் என்ற பெயரில் இருந்த அனைத்து பெயர் பலகைகளும் தற்போது அகற்றப்பட்டுள்ளது.

    vlcsnap 2026 07 19 12h41m47s881 1

    குறிப்பாக, முதல் எஸ்டேட் மாஞ்சோலையில் அமைந்துள்ளது. எனவே மாஞ்சோலையில் சோதனைச் சாவடி அமைத்து அருகில் பிபிடிசி என்ற பெயரில் பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் வனத்துறையினர் அந்த பலகையை தற்போது அகற்றி உள்ளனர். மேலும், மாஞ்சோலை டீக்கடை முன்பிருந்த பெயர் பலகை நாலுமுக்குவில் இருந்த பெயர் பலகை என பெரும்பாலான பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளது.

    மத்திய குழுவினர் ஆய்வு

    மேலும், நாலுமுக்கு ஊத்து பகுதியில் தேயிலை தொழிற்சாலை கட்டடங்களும் முழுவதுமாக பிடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இதனால், மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் முழுவதும் ஆள் நடமாட்டம் மிக மிக குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கே தொழிலாளர்கள் தேயிலை பறித்துக் கொண்டிருந்தனர். சுற்றுலாவுக்காக பொதுமக்களும் வந்து சேர்ந்தனர்.

    தொடர்ந்து அடுத்த கட்டமாக மாஞ்சோலையை மேம்படுத்தப்பட்ட வனப்பகுதியாக மாற்றும் முயற்சியில் வனத்துறை இறங்கியுள்ளது. இதற்காக தனியார் தொண்டு நிறுவனத்திடம் ஆராய்ச்சி செய்யும் பணியை வனத்துறை ஒப்படைத்துள்ளது. மேலும், எஸ்டேட் இருந்த பகுதியை மீண்டும் காடாக மாற்றுவது தொடர்பாக மத்திய குழுவினர் விரைவில் ஆய்வுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, உரிய ஆய்வுக்கு பிறகு எஸ்டேட் பகுதி முழுவதும் மீண்டும் அடர்ந்த வனப் பகுதியாக மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

    ForestRestoration Manjolai tamilnadu WesternGhats
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleCM விஜய் அலுவலக டேபிளில் கிறிஸ்து சிலுவை.. இதுதான் உங்க மதசார்பின்மை அரசா..?? பரபரப்பு விவாதம்..!!
    Next Article நண்பரோ, உறவினரோ.. அமைச்சர் பெயரைச் சொல்லி வந்தால் அனுமதிக்காதீர்..! சம்பத்குமார் தடாலடி..!!
    Editor web2
    • Website

    Related Posts

    நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மசோதாக்கள், அரசியல் மோதல்கள் என அனல் பறக்கும் அமர்வு

    July 19, 2026

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    July 19, 2026

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மசோதாக்கள், அரசியல் மோதல்கள் என அனல் பறக்கும் அமர்வு

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்கள்… கறி விருந்து கொடுத்த நடிகர் ஜீவா

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.