Close Menu
    What's Hot

    கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் அபிஷன் ஜீவிந்த்!. புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

    திருச்சி கிழக்கு வேட்பாளர் யார்? பரபரப்பாகும் அரசியல் களம் – பொது வேட்பாளர் நிறுத்தமா?

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குடமுழுக்கு.. நேரத்தை மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு..
    ராசிபலன்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குடமுழுக்கு.. நேரத்தை மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு..

    Editor TN TalksBy Editor TN TalksJune 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    new project 51
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குடமுழுக்கை காலை நேரத்திலேயே நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்.

    திருச்செந்தூரை சேர்ந்த ஆர்.சிவராம சுப்ரமணிய சாஸ்திரிகள் தாக்கல் செய்த மனுவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கை 7-7-2025 அன்று காலை 06 மணி முதல் காலை 6.47 மணி வரை என நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    ஆனால், இதற்கு பதிலாக, 7-7-2025 மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை தோஷங்கள் இல்லாத நல்ல முகூர்த்த நேரம் உள்ளது. எனவே அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இந்த ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவின்படி கோயில் நிர்வாகம் அமைத்த நிபுணர் குழு முடிவு செய்த காலை நேரத்திலேயே குடமுழுக்கு நடத்தலாம். ஆனால் வரும் காலங்களில் திருச்செந்தூர் கோவில் நிகழ்வு நடைபெறும் போது கோவில் விதாயகரிடம், எழுத்து பூர்வமாக விளக்கம் பெற வேண்டும் என உத்தரவிட்டது.

    குடமுழுக்கு நேரம் மாற்றப்படாததை தொடர்ந்து, ஆர்.சிவராம சுப்ரமணிய சாஸ்திரிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக் கூறி நீதிபதி கே.வி.விஸ்வநாதன் தலைமையிலான உச்சநீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

    அப்போது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ஆராய்ந்த நீதிபதிகள், குடமுழுக்கு நேரம் கடந்த ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டதன் அடிப்படையில் தான் இவ்வாண்டும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் என்ன பிரச்சனை உள்ளது? என வினவினர். அதற்கு மனுதாரர் தரப்பில் கடந்த ஆண்டு விதாயகர் நேரம் குறித்து கொடுத்தார். ஆனால் இந்த ஆண்டு உயர்நீதிமன்றம் அமைத்த குழு தான் நேரத்தை தீர்மானம் செய்தது. அந்தக் குழுவே சட்ட விரோதமானது என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விதாயகரிடம் நேரம் குறித்து கொடுக்கக் கூறாமல் குழுவே தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே குடமுழுக்கை நண்பகல் நல்ல நேரத்தில் நடத்த வேண்டும் என கூறுகிறோம் என தெரிவித்தார்

    மேலும், இந்த வழக்கை நாளையே அவசரமாக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் இந்த வழக்கை ஜூலை 1ம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவேலூரில் ரோட் ஷோ நடத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்… ரூ.197 கோடியில் அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு..
    Next Article நடிகர் கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனை… 2 மணி நேரம் நீடித்த தேடுதல்…
    Editor TN Talks

    Related Posts

    குருப் பெயர்ச்சிப் பலன்கள் – 2026

    May 5, 2026

    மே மாத ராசி பலன்கள் – 2026

    May 5, 2026

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் அபிஷன் ஜீவிந்த்!. புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

    திருச்சி கிழக்கு வேட்பாளர் யார்? பரபரப்பாகும் அரசியல் களம் – பொது வேட்பாளர் நிறுத்தமா?

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    இவ்வளவு பக்கத்துல யானையா? ; அலறி அடித்து ஓடிய பெண் – வைரலாகும் சிசிடிவி காட்சி

    நிறைவேறியது அதிமுக நிர்வாகியின் கடைசி ஆசை..!! கண்ணீர் மல்க.. தஞ்சைக்கு ஓடோடி வந்த இபிஎஸ்..!!

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது!

    June 1, 2026

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.