அனில் ரவிபுடி இயக்கியிருக்கும் திரைப்படம், ‘மன சங்கர வர பிரசாத் காரு’. இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, நாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக நயன்தாராவும், இரண்டாவது நாயகியாக கேத்ரின் தெரசாவும் நடித்துள்ளனர். கடந்த 12-ம் தேதி வெளியான இப்படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அண்மையில் கூட, இந்த படத்தில் வரும் காட்சி ஒரு ஜோடியின் விவாகரத்து முடிவை மாற்ற செய்திருப்பதாக சிரஞ்சீவி நெகிழ்ச்சி தெரிவித்தார். இதுகுறித்து சிரஞ்சீவி கூறியதாவது,“கணவன்-மனைவி இடையே ஏற்படும் சண்டையில் மூன்றாம் நபர் தலையிடக் கூடாது என்பது உண்மைதான். படத்தில் வரும் காட்சி ஒரு ஜோடியை தங்கள் விவாகரத்து முடிவை மாற்ற செய்திருக்கிறது. இப்போது அவர்கள் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். படம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

இந்தநிலையில், இப் படத்திற்கு புக்மைஷோ போன்ற டிக்கெட் முன்பதிவு தளங்களில் ரிவ்யூ மற்றும் விமர்சனங்களை தெரிவிக்க தடை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்படத்தின் வசூலை பாதிக்கக்கூடிய ஆன்லைன் தாக்குதல்கள் / திட்டமிட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் ஏற்படும் என்ற அச்சத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, BookMyShow (BMS) தளத்தில்  திரைப்படத்திற்கான பக்கம் தற்போது ratings மற்றும் reviews முடக்கப்பட்டுள்ளன. “நீதிமன்ற உத்தரவின்படி மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்கள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

https://x.com/taran_adarsh/status/2010330103134425180?

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் கூறியதாவது, “பெரிய முன்னேற்றம் – தெலுங்கு திரைப்படத் துறை மிகப் பெரிய முயற்சியை எடுத்துள்ளது. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையாக, டிஜிட்டல் முறைகேடுகள் மற்றும் திட்டமிட்ட ஆன்லைன் துஷ்பிரயோகங்களிலிருந்து சினிமாவை பாதுகாக்க தெலுங்குத் திரையுலகம் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுத்துள்ளது,” என்று பகிர்ந்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, “ஒருங்கிணைந்த முறையில் செய்யப்படும் நெகட்டிவ் டவுன்-ரேங்கிங் மற்றும் தீங்கிழைக்கும் விமர்சனத் தாக்குதல்களைத் தடுக்க, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இந்த திரைப்படத்திற்காக டிக்கெட் முன்பதிவு தளங்களில் ratings மற்றும் reviews சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.” இந்த உத்தரவு தெலுங்கு திரைப்படத் துறையில் முதன்முறையாக வழங்கப்பட்டதாகும். இதன் மூலம்,
நியாயமான டிஜிட்டல் நடைமுறைகள் மற்றும் நெறிமுறையுடன் கூடிய பார்வையாளர் பங்கேற்பு ஆகியவற்றுக்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://x.com/TheDeverakonda/status/2010279655681749314?

நீதிமன்ற உத்தரவுக்கு பதிலளித்த, நடிகர் விஜய் தேவரகொண்டா, “பலரின் கடின உழைப்பு, கனவுகள், முதலீடு ஆகியவை ஒருவிதத்தில் பாதுகாக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனால், நம்முடைய சொந்த மக்களே இப்படியான பிரச்சினைகளுக்குக் காரணமாக இருப்பது வருத்தமளிக்கிறது. ‘வாழவும் வாழவிடவும்’ என்ற எண்ணம் எங்கே போனது?
ஒன்றாக வளர வேண்டும் என்ற மனநிலை என்ன ஆனது?”என்று பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version