‘சூர்யா 47’ படம் குறித்த அப்டேட்டை இயக்குநர் ஜித்து மாதவன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் 47-வது படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. ‘சூர்யா 47’ படத்தின் தலைப்பு குறித்த தகவல்களை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்தநிலையில், படம் குறித்து தெரிவித்துள்ள இயக்குனர் ஜித்து மாதவன், திரைப்படத்தை ரசிகர்களுக்கு எந்த விதத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்பதால், படத்தின் முதல் போஸ்டர் கூட இன்னும் வெளியிடப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
கருப்பு படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, விஸ்வநாதன் அன்ட் சன்ஸ் மற்றும் சூர்யா 47 படங்களில் கவனம் செலுத்தினார். இந்தநிலையில், வெங்கட் அட்லுரி இயக்கத்தில் விஸ்வநாதன் அன்ட் சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
