ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரபாஸின் பிரம்மாண்ட திரைப்படம் ‘பௌசி’ டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் வரலாற்றுப் போர் கதைக்களத்தை கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனை நிரூபிக்கும் வகையில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தின் போஸ்டரில், பிரபாஸ் உடலெங்கும் ரத்தக் கறைகளுடன், கையில் துப்பாக்கியை ஏந்தியபடி போர்க்களத்தில் அமர்ந்திருப்பது போன்ற மிரட்டலான தோற்றம் இடம் பெற்றுள்ளது. தனியாகப் போராடும் ஒரு பட்டாளம் என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியப் பின்னணியில் (1940-களில்) நடக்கும் ஒரு தேசபக்தி மற்றும் உணர்வுப்பூர்வமான கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பிரபாஸுக்கு ஜோடியாக இமான்வி அறிமுகமாகிறார். மேலும், மிதுன் சக்ரவர்த்தி, அனுபவம் கெர் மற்றும் ஜெயப்பிரதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘சீதா ராமம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஹனு ராகவபுடி – விஷால் சந்திரசேகர் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
‘பௌசி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் பான்-இந்தியா படமாக வெளியாகவுள்ளது. அண்மையில் வெளியான இவரது ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் இறுதியில் பிரபாஸ் ரசிகர்களுக்குப் விருந்தாக ‘பௌசி’ அமையவுள்ளது.

