இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் அரசன் திரைப்படத்தின் வெளியீடு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலை படத்தை தொடர்ந்து வெற்றி மாறன் நீண்ட நாட்களாக சிம்புவை வைத்து அரசன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். வட சென்னை படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் பார்க்கப்படுகிறது. இப்படத்தில் சிம்புவுடன் பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா உட்பட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது. 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்ன்னையில் தீவிரமாக நடைபெற்று நிறைவடையும் தருவாயில் உள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படுகிறது. இந்த அரங்கத்தில் வடசென்னை பகுதி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
3-வது கட்ட படப்பிடிப்பில் போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ராஜன் கேரக்டரில் நடித்த அமீரும், சந்திரா கேரக்டரில் நடித்த ஆண்ட்ரியாவும் படப்பிடிப்பில் பங்கேற்கின்றனர். 3 மாதத்தில் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைகிறது. வரும் தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிடப்படுள்ளது.
அதன்படி தீபாவளி பண்டிகையை ஒட்டி, நவம்பர் 6-ம் தேதி அன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
