மதுரையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு மயங்கி விழுந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பொன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. கூலி வேலை செய்து வரும் கருப்பையாவுக்கு பாண்டிச் செல்வி என்ற 24 வயது மகள் இருந்துள்ளார். பட்டதாரியான இவர், திருமங்கலம் அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

பாண்டிச்செல்வி நேற்று விருதுநகர் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து சிக்கன் ரைஸ் வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த பாண்டிச்செல்வி அங்கேயே மயங்கி விழுந்துளார். பாண்டிச்செல்வி மயங்கி கிடந்ததை கண்ட பெற்றோர், அவரை உடனடியாக ஈட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version