Close Menu
    What's Hot

    திமுக தோல்வி: ஸ்டாலினை அதிரவைத்த ஆய்வுக்குழுவின் 4 காரணங்கள்!

    ”வாடி நிற்கும் விவசாயிகள்…”- காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்? – திமுக கேள்வி

    புதுச்சேரியில் ஒரு ‘தவெக’ ஸ்டைல் திருமணம்!. மேடையை அலங்கரித்த முதல்வர் விஜய் படம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»குறுவை சாகுபடிக்கு ரூ.134.83 கோடி சிறப்புத் தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு
    Featured

    குறுவை சாகுபடிக்கு ரூ.134.83 கோடி சிறப்புத் தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு

    Editor web2By Editor web2June 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Paddy Cultivation
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டுக்கான குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் “குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் – 2026” செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

    டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு மானியங்கள் மற்றும் சலுகைகள் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளன.

    வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்ததாலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் போதுமான அளவில் இல்லாததாலும், குறுவை சாகுபடியில் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் இந்த சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, டெல்டா மாவட்டங்களில் வடிகால் குழாய் கிணறுகள் மூலம் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்காக ரூ.77.50 கோடியும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக ரூ.57.33 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் சுமார் 52.72 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு இருப்பதாகவும், காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7,296 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

    குறுவை சாகுபடிக்காக இயந்திர நடவு, நெல் விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டங்கள் மற்றும் பிற இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. சுமார் 10,714 மெட்ரிக் டன் நெல் விதைகளும், 4.02 லட்சம் மெட்ரிக் டன் உரங்களும் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டத்தின் மூலம் நெல் உற்பத்தியை அதிகரித்து, தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், விவசாயிகளின் வருமானத்தையும் உயர்த்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், குறுவை மற்றும் தாளடி சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்தத் திட்டத்தின் சலுகைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீங்க சொல்லுங்க.. வேண்டாம்னா நான் அரசியலுக்கு வர மாட்டேன்..!! மக்களிடம் முடிவை கொடுத்த ராகவா லாரன்ஸ்!!
    Next Article காற்றில் கரைந்த 260 உயிர்கள்!. அகமதாபாத் விமான துயரத்தின் ஓராண்டு கண்ணீர் நினைவலைகள்!
    Editor web2
    • Website

    Related Posts

    திமுக தோல்வி: ஸ்டாலினை அதிரவைத்த ஆய்வுக்குழுவின் 4 காரணங்கள்!

    June 12, 2026

    ”வாடி நிற்கும் விவசாயிகள்…”- காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்? – திமுக கேள்வி

    June 12, 2026

    புதுச்சேரியில் ஒரு ‘தவெக’ ஸ்டைல் திருமணம்!. மேடையை அலங்கரித்த முதல்வர் விஜய் படம்!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக தோல்வி: ஸ்டாலினை அதிரவைத்த ஆய்வுக்குழுவின் 4 காரணங்கள்!

    ”வாடி நிற்கும் விவசாயிகள்…”- காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்? – திமுக கேள்வி

    புதுச்சேரியில் ஒரு ‘தவெக’ ஸ்டைல் திருமணம்!. மேடையை அலங்கரித்த முதல்வர் விஜய் படம்!

    அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து..!! 8 வாரங்களில் பதில் வேண்டும்..!! சென்னை ஐகோர்ட் உத்தரவு..!!

    வாங்குன கடனை கட்ட முடியல..!! கண்ணீருடன் மா மரங்களை வெட்டி வீசியெறியும் விவசாயி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.