உலகப் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடலில் நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் முருகனை தரிசிப்பர்.

அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் இன்று முதல் செல்போன் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் எதிரொலியாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் முழு பரிசோதனை செய்த பிறகே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் கட்டண தரிசன வரிசை மட்டுமின்றி கட்டணமில்லா தரிசன வரிசையில் வரும் பக்தர்களையும் நவீன இயந்திரங்கள் மு9உலம் பரிசோதனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு பரிசோதனையின்போது தடையை மீறி செல்போன்கள் எடுத்து செல்வது தெரிந்தால், அவற்றை உடனடியாக பறிமுதல் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தரிசனத்திற்கு முன்னதாக கோயிலில் தங்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version