Close Menu
    What's Hot

    சபரிமலையில் அன்புமணி-சௌமியா!. குடும்பத்துடன் சாமி தரிசனம்!

    திடீர் கடல் சீற்றம்..!! வீடுகளுக்குள் புகுந்த கடல் நீரால் தவிக்கும் குமரி மக்கள்..!!

    நடப்பாண்டில் ஓர் இலட்சம் பயணிகள் வருகை – இது புதுவை விமான நிலைய கணக்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • சிறப்புக் கட்டுரைகள்
    • அரசியல்
    • LIFESTYLE
    TN Talks
    Home»Featured»இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான பீடி இலை, சிகரெட்டுகள்  பறிமுதல்!. லாரி டிரைவர் கைது!
    Featured

    இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான பீடி இலை, சிகரெட்டுகள்  பறிமுதல்!. லாரி டிரைவர் கைது!

    Editor web3By Editor web3June 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    smuggling to Sri Lanka
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 1,400 கிலோ பீடி இலைகள் மற்றும் 1.20 லட்சம் சிகரெட்டுகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டாரஸ் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி கடல் எல்லையைப் பயன்படுத்தி இலங்கைக்கு உரிய ஆவணங்கள் ஏதுமின்றி சட்டவிரோதமாக பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. பீடி இலைகள், சிகரெட்டுகள், மருந்து பொருட்கள், வலி நிவாரண மாத்திரைகள், மஞ்சள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பட்டாசுகள் மற்றும் வாசனை சோப்புகள் எனப் பல பொருட்கள் படகுகள் மூலம் கடத்தப்பட்டு வருகின்றன. இதனைத் தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் கடற்பகுதியில் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டு கடத்தலை முறியடித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை ஓரமாக படகு மூலம் இலங்கைக்குப் பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக கடலோர காவல் நிலைய ஆய்வாளர் பேச்சிமுத்துவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒரு டாரஸ் லாரியை போலீசார் சுற்றி வளைத்து சோதனை செய்தனர்.  அதில், இலங்கைக்கு விசைப்படகு மூலம் கடத்துவதற்காக மூட்டை மூட்டையாகப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியில் இருந்த 1,400 கிலோ பீடி இலைகள் மற்றும் 1,20,000 எண்ணிக்கையிலான சிகரெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இவற்றின் மதிப்பு சுமார் 40 லட்ச ரூபாய் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, கடத்தல் பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டாரஸ் லாரியைக் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரான மாரிகுமார் என்பவரைக் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து கடத்தல் பொருட்களும் மேல் நடவடிக்கைக்காக சுங்கத்துறை அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.

    Beedi leaves cigarettes smuggling to Sri Lanka tuticorin worth ₹40 lakh
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாகலூர் அருகே பரபரப்பு!. சீறிய ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு!
    Next Article ஆக்ரோஷமாக மாறிய ‘பாகுபலி’..!! குடியிருப்புக்குள் புகுந்து அட்ராசிட்டி..!! பீதியில் மக்கள்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    சபரிமலையில் அன்புமணி-சௌமியா!. குடும்பத்துடன் சாமி தரிசனம்!

    June 15, 2026

    திடீர் கடல் சீற்றம்..!! வீடுகளுக்குள் புகுந்த கடல் நீரால் தவிக்கும் குமரி மக்கள்..!!

    June 15, 2026

    நடப்பாண்டில் ஓர் இலட்சம் பயணிகள் வருகை – இது புதுவை விமான நிலைய கணக்கு!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சபரிமலையில் அன்புமணி-சௌமியா!. குடும்பத்துடன் சாமி தரிசனம்!

    திடீர் கடல் சீற்றம்..!! வீடுகளுக்குள் புகுந்த கடல் நீரால் தவிக்கும் குமரி மக்கள்..!!

    நடப்பாண்டில் ஓர் இலட்சம் பயணிகள் வருகை – இது புதுவை விமான நிலைய கணக்கு!

    வேலூரில் பகீர் சம்பவம்: 6 வயது சிறுவன் நரபலியா..?? போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை..!!

    ”சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு”… என்னவானது சிங்கப்பெண் அதிரடிப்படை?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.