ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் இரவு காவலாளியின் ஊதியத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலரை ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரவு நேர காவலாளியாக கனிராவுத்தர் குளத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் பணியாற்றி வருகிறார்.ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் சண்முகசுந்திரத்திற்கு நாள் தோறும் 762 ஊதியமாக வழங்கபட்டு வருகிறது.

ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் லதா என்பவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களியிடம் அவர்களுக்கு வரும் ஊதியத்தில் இருந்து ஒரு பகுதியை மாதா மாதம் மிரட்டி வாங்கி வந்தாக கூறப்படுகிறது. மேலும் தராதவர்கள் மீது வேலை செய்ய முடியாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இரவு காவலாளி சண்முகசுந்தரத்திடமிருந்து ஊதியத்தில் ஒரு பங்கை கேட்டுள்ளார்.ஏற்க்கனவே உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சண்முகசுந்தரம் அதிர்ச்சி அடைந்து இது குறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து அவர்கள் கொடுத்த 10 ஆயிரம் ரூபாய் ராசாயனம் கலந்த நோட்டுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் லதா விடம் சண்முகசுந்திரம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் லதா வை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version