19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு நடைப்பயணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவையில் இருந்து தொடங்கியுள்ளனர்.
மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், கட்சியின் மாநில பொருளாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம். ஆறுமுகம் நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார்.

நடைப்பயணத்தின் போது பொதுமக்களை நேரில் சந்தித்து, 19 அம்ச கோரிக்கைகள் குறித்து விளக்கி, துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினர். ஆகஸ்ட் 6 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சார நடைப்பயணம் மூலம், மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினைகள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version