Close Menu
    What's Hot

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    திருப்பூர் : கர்ப்பிணி காதல் மனைவியை கொலை செய்த கணவர்..! தானும் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி என்ன?

    அரசு வழக்கறிஞர் நியமனம்; அமைச்சர் புஸ்சி ஆனந்த் ரூ.120 கோடி வசூல்வேட்டை – யூ டியூபர் மாரிதாஸ் பகீர் தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பைரசி ஒழிப்பில் மத்திய அரசு தீவிரம்..!! டெலிகிராமுக்கு பறந்த நோட்டீஸ்..!! 15 நாள் கெடு..!!
    Featured

    பைரசி ஒழிப்பில் மத்திய அரசு தீவிரம்..!! டெலிகிராமுக்கு பறந்த நோட்டீஸ்..!! 15 நாள் கெடு..!!

    editor5By editor5July 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 22 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய சினிமா மற்றும் ஓடிடி துறையில் பரவும் பதிப்புரிமை மீறல்களை தடுக்கத் தவறியதாக பிரபல குறுஞ்செய்தி செயலியான டெலிகிராமுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இன்று கடுமையான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசில், திருட்டு உள்ளடக்கங்களுக்கு எதிராக உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்கவும், அடுத்த 15 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கவும் மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

    டெலிகிராம் தளத்தில் புதிய திரைப்படங்கள், ஓடிடி வெப் சீரிஸ்கள் உள்ளிட்ட பல்வேறு உள்ளடக்கங்கள் சட்டவிரோதமாக பகிரப்படுவது இந்திய படைப்புத் துறையின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்து வருகிறது. சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஓடிடி தளங்கள் மற்றும் படைப்பாளர்களின் வருவாயை கணிசமாக பாதிக்கும் இந்த திருட்டு நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நோட்டீசில் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளதாவது, 1957-ம் ஆண்டு பதிப்புரிமைச் சட்டம் மற்றும் 1952-ம் ஆண்டு சினிமாட்டோகிராஃப் சட்டத்தின்படி பதிப்புரிமை மீறல் வெறும் சிவில் குற்றம் மட்டுமல்ல, கடுமையான கிரிமினல் குற்றமாகக் கருதப்படுகிறது. இதுவரை அரசு புகார் அளித்த சேனல்களை மட்டும் நீக்கும் முறையை டெலிகிராம் பின்பற்றி வந்த நிலையில், இனி அரசாங்கம் சொல்லும் வரை காத்திருக்காமல், தானாகவே திருட்டு திரைப்படங்களை பகிரும் சேனல்கள், குழுக்கள், பாட்கள் மற்றும் அவற்றின் நிர்வாகிகளை கண்டறிந்து முடக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், ஓடிடி தளங்கள், இயக்குநர்கள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அமைப்புகள் நேரடியாக புகார் அளிக்கும் வகையில் குறைதீர்ப்பு பொறிமுறையை வலுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளுக்கு இணங்கத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 மற்றும் ஐடி ரூல்ஸ் 2021-ன் கீழ் டெலிகிராம் பெற்றுவரும் பாதுகாப்புச் சலுகைகளை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவத்தில் சிக்கிய டெலிகிராம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் தற்காலிக கட்டுப்பாடுகளை எதிர்கொண்டது. இந்நிலையில், தற்போது விதிக்கப்பட்ட 15 நாட்கள் கெடு டெலிகிராம் நிர்வாகத்துக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவின் படைப்பாற்றல் துறையை பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Central Government telegram
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுதிரைப் பேரத்தில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரணை ; மனுவுக்கு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
    Next Article ஏதாவது பிரச்சனையா..?? ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்..!! மக்களுக்கு அர்லேகர் அழைப்பு..!!
    editor5

    Related Posts

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    July 4, 2026

    திருப்பூர் : கர்ப்பிணி காதல் மனைவியை கொலை செய்த கணவர்..! தானும் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி என்ன?

    July 4, 2026

    அரசு வழக்கறிஞர் நியமனம்; அமைச்சர் புஸ்சி ஆனந்த் ரூ.120 கோடி வசூல்வேட்டை – யூ டியூபர் மாரிதாஸ் பகீர் தகவல்

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    திருப்பூர் : கர்ப்பிணி காதல் மனைவியை கொலை செய்த கணவர்..! தானும் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி என்ன?

    அரசு வழக்கறிஞர் நியமனம்; அமைச்சர் புஸ்சி ஆனந்த் ரூ.120 கோடி வசூல்வேட்டை – யூ டியூபர் மாரிதாஸ் பகீர் தகவல்

    திருவள்ளூர் : அமோனியா வாயு கசிந்த தொழிற்சாலை..! ஆட்சியர் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு..!

    ஏதாவது பிரச்சனையா..?? ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்..!! மக்களுக்கு அர்லேகர் அழைப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.