Close Menu
    What's Hot

    நெற்றியில் நாமம், வாயில் கருப்பு துணி..!! நூதன ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய விவசாயிகள்..!!

    கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் அபிஷன் ஜீவிந்த்!. புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

    திருச்சி கிழக்கு வேட்பாளர் யார்? பரபரப்பாகும் அரசியல் களம் – பொது வேட்பாளர் நிறுத்தமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»இனி டைமிங் மிஸ்சே ஆகாது..!! சென்னை தலைமைச் செயலகத்தில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு அமல்..!!
    Featured

    இனி டைமிங் மிஸ்சே ஆகாது..!! சென்னை தலைமைச் செயலகத்தில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு அமல்..!!

    editor5By editor5June 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 06 01 at 11.49.13 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

    தமிழ்நாடு அரசின் நிர்வாக இதயமான தலைமைச் செயலக வளாகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வருகைப் பதிவில் புரட்சிகர மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் (கைரேகை) மற்றும் முக அங்கீகார (Face ID) தொழில்நுட்பங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த முறை முதலில் மனிதவள மேலாண்மைத் துறையில் அமலுக்கு வந்துள்ளது. விரைவில் அனைத்து துறைகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள தலைமைச் செயலகம் மற்றும் 10 தளங்கள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாநிலத்தின் முக்கிய நிர்வாக நடவடிக்கைகள் இயங்கி வருகின்றன. இங்கு 54 துறை செயலர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தினசரி பணியாற்றுகின்றனர். காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை அலுவலக நேரம் நீடிக்கும். உணவு இடைவேளை அரை மணி நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை கையொப்ப முறையில் வருகைப் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது தொடுதிரை இயந்திரங்கள் மூலம் நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    வருகை நேரம், தாமதம், முன்கூட்டிய வெளியேற்றம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் துல்லியமாகப் பதிவாகும். இந்த அமைப்பு நிர்வாக ஒழுக்கத்தை வலுப்படுத்துவதோடு, பணி நேரத்தை முறையாகப் பயன்படுத்தி பொது மக்களுக்கு துரித சேவை வழங்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், கடந்த ஆட்சியின் போது தலைமைச் செயலகம் முழுவதும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டபோது, தலைமைச் செயலக பணியாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

    தற்போது மீண்டும் மனிதவள மேலாண்மைத் துறையில் தொடங்கியுள்ள இந்த முயற்சி, படிப்படியாக முழு வளாகத்துக்கும் நீட்டிக்கப்பட உள்ளது. அரசு அதிகாரிகள் கூறுகையில், “நிர்வாகத்தை மேம்படுத்தி, ஊழியர்களின் பணி திறனை அதிகரிப்பதோடு, பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க இத்தகைய நவீன தொழில்நுட்பங்கள் அவசியம். e-Governance மற்றும் டிஜிட்டல் இந்தியா முயற்சிகளுக்கு ஏற்ப இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்றனர்.ஊழியர்கள் தரப்பில் சிலர் தொழில்நுட்பப் பிரச்னைகள், தனியுரிமை குறித்த கவலைகளை வெளியிட்டாலும், பெரும்பாலானோர் இந்த மாற்றத்தை வரவேற்கின்றனர்.

    “இது அலுவலக ஒழுக்கத்தை மேம்படுத்தும். தவறான பதிவுகள் தவிர்க்கப்படும்” என சிலர் தெரிவித்தனர்.தமிழ்நாடு அரசின் நிர்வாக சீர்திருத்த முயற்சிகளில் இது முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. ஊழியர்களின் பணி நேர ஒழுக்கம் மேம்படுத்தப்பட்டால், அரசு திட்டங்கள் விரைவாகச் செயல்படுத்தப்படும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். விரைவில் முழு செயலக வளாகத்திலும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முழுமையாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅடுத்து திருத்தணி..!! மொட்டை அடிக்க லஞ்சம்.. 4 பேர் அதிரடி சஸ்பெண்ட்..!!
    Next Article ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாறுகிறதா தமிழக ஆளுநர் மாளிகை..?? அமைச்சர் வன்னியரசு காட்டம்..!!
    editor5

    Related Posts

    நெற்றியில் நாமம், வாயில் கருப்பு துணி..!! நூதன ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய விவசாயிகள்..!!

    June 1, 2026

    கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் அபிஷன் ஜீவிந்த்!. புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

    June 1, 2026

    திருச்சி கிழக்கு வேட்பாளர் யார்? பரபரப்பாகும் அரசியல் களம் – பொது வேட்பாளர் நிறுத்தமா?

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நெற்றியில் நாமம், வாயில் கருப்பு துணி..!! நூதன ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய விவசாயிகள்..!!

    கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் அபிஷன் ஜீவிந்த்!. புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

    திருச்சி கிழக்கு வேட்பாளர் யார்? பரபரப்பாகும் அரசியல் களம் – பொது வேட்பாளர் நிறுத்தமா?

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    இவ்வளவு பக்கத்துல யானையா? ; அலறி அடித்து ஓடிய பெண் – வைரலாகும் சிசிடிவி காட்சி

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது!

    June 1, 2026

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.