Close Menu
    What's Hot

    தமிழ்நாட்டை உலுக்கிய கும்மிடிப்பூண்டி வழக்கு..!! பீகார் இளைஞனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!!

    தவெக எம்.எல்.ஏ வெற்றிக்கு எதிராக வழக்கு..! ஊழல் செய்து வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு..!

    ஸ்லோவாக்கியாவில் பிரதமர் மோடி..!! மாணவர்களின் யோகா சாகசத்தை கண்டு நெகிழ்ச்சி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»Featured»பச்சைத் துரோகி… இபிஎஸ் மீது ஸ்டாலின் பாய்ச்சல்
    Featured

    பச்சைத் துரோகி… இபிஎஸ் மீது ஸ்டாலின் பாய்ச்சல்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 26, 2025Updated:November 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MK Stalin and Edappadi Palaniswamy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பச்சைத் துரோகி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    நெல் ஈரப்பதம் விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஸ்டாலின் துரோகம் செய்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி அண்மையில் சாடியிருந்தார். இதற்கு ஸ்டாலின் இன்று பதிலடி கொடுத்துள்ளார்.  இதுகுறித்து ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றியதாவது:

    தன்னை மேற்கு மண்டலத்துக்காரர் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இந்த மண்டலத்துக்கு இதுபோன்ற செயல்களைச் செய்திருக்கின்றாரா? அப்படி என்று நான் கேட்க விரும்பவில்லை! அவர் செய்தது எல்லாம் என்ன? வெறும் துரோகம்தான்! பச்சைத் துண்டை அணிந்து கொண்டு தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பழனிசாமி பச்சைத் துரோகம் செய்கிறார் என்று நான் சொன்னதும், அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.

    “நான் ஒரு விவசாயி, இப்போதும் விவசாயம் செய்கிறேன்” என்று சொல்கிறார் பழனிசாமி. அவர் ஒரு துரோகி, இப்போதும் தொடர்ந்து துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார் என்று தான் சொல்லலாமே தவிர, அவரை விவசாயி என்று சொல்வது உண்மையான உழவர் பெருமக்களை அவமானப்படுத்துவதற்கு சமமாகிவிடும்.

    நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு நிராகரித்துவிட்டார்கள். பழனிசாமி உண்மையான விவசாயியாக இருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்? தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்கவேண்டும் பிரதமர் மோடி அவர்களே என்று அவர் சொல்லி இருக்க வேண்டுமா? வேண்டாமா? டெல்லியில் பல கார்களில் மாறி, மாறி சென்று யார் யாரையோ சந்திக்கிறீர்களே?

    தமிழ்நாட்டு விவசாயிகளுக்காக கோரிக்கை வைக்க பிரதமரை சந்திக்கிறேன் என்று சொல்லுங்கள்… நீங்கள் சொன்னால் போதும்…. தமிழ்நாடு அரசு சார்பில், நானே உங்களுக்கு காருக்கு ஏற்பாடு செய்து அதுவும் வேர்க்காத அளவுக்கு நல்ல வண்டியாக ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறேன். பழனிசாமி, இந்த மேற்கு மண்டலத்திற்கு இழைத்த பச்சைத் துரோகப் பட்டியலில், லேட்டஸ்ட் அடிஷன் கோவை மெட்ரோ ரயில் துரோகம்.

    சென்னையை போல, கோவை, மதுரையின் வருங்கால வளர்ச்சிக்கும், மெட்ரோ ரயில் தேவை என்று நாம் கோரிக்கை வைத்தோம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு அதையும் நிராகரித்திருக்கிறது. 2011 மக்கள்தொகையை கணக்கில் வைத்து, நிராகரித்திருக்கிறார்கள். இப்போது 2025-ஆம் ஆண்டு! சென்சஸ் எடுத்தால் 20 இலட்சத்திற்கு அதிகமாக இருக்கும்.

    இன்னும் சொன்னால், இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி, திட்டத்தை நிறைவேற்றி முடிக்கும்போது 2035-ஆம் ஆண்டு ஆகி இருக்கும். வட மாநிலத்தில், 20 இலட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் எல்லாம் மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்து இயக்குகிறார்கள். தமிழ்நாடு என்றால் மட்டும் கம்பி கட்டுகின்ற கதையெல்லாம் சொல்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காத தமிழ்நாடு எதைக் கேட்டாலும் தரக்கூடாது என்ற முடிவோடு இருக்கிறது பா.ஜ.க.

    ‘அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், கோவைக்கு மெட்ரோ கொண்டு வருவோம்’ என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார். அதேபோல, பா.ஜ.க.வைச் சேர்ந்த கோவை சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் இதே கருத்தைச் சொல்லி இருக்கிறார். அப்படியென்றால், திமுக ஆட்சியில் இருக்கிறது என்ற ஒரே காரணத்தால்தான் கோவை, மதுரை மக்களை பா.ஜ.க. பழிவாங்குகின்றது என்று ஒப்புதல் வாக்குமூலமே வழங்கியிருக்கிறார்கள்.

    இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“மாநில உரிமைகளை பாதுகாக்க உறுதியேற்போம்” – முதல்வர் ஸ்டாலின்
    Next Article தவெக துணைத் தலைவராகும் செங்கோட்டையன்?
    Editor TN Talks

    Related Posts

    தமிழ்நாட்டை உலுக்கிய கும்மிடிப்பூண்டி வழக்கு..!! பீகார் இளைஞனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!!

    June 16, 2026

    தவெக எம்.எல்.ஏ வெற்றிக்கு எதிராக வழக்கு..! ஊழல் செய்து வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு..!

    June 16, 2026

    ஸ்லோவாக்கியாவில் பிரதமர் மோடி..!! மாணவர்களின் யோகா சாகசத்தை கண்டு நெகிழ்ச்சி..!!

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாட்டை உலுக்கிய கும்மிடிப்பூண்டி வழக்கு..!! பீகார் இளைஞனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!!

    தவெக எம்.எல்.ஏ வெற்றிக்கு எதிராக வழக்கு..! ஊழல் செய்து வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு..!

    ஸ்லோவாக்கியாவில் பிரதமர் மோடி..!! மாணவர்களின் யோகா சாகசத்தை கண்டு நெகிழ்ச்சி..!!

    12வது சர்வதேச யோகா தினம்..!! கொல்கத்தா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி..!!

    மாற்றுத்திறனாளி மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..! 28வயது இளைஞரின் கொடூர செயல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.