Close Menu
    What's Hot

    ’நீட் தேர்வு வினாக்களை மனப்பாடம் செய்து கொண்டு சென்ற பாட நிபுணர்கள்’- அதிர்ச்சி தகவல்

    ஆதவ் அர்ஜுனா எழுப்பிய கேள்வி.. தொகுதி மறுவரையறை குறித்து உதயநிதி சொன்ன பதில்!

    ஒவ்வொரு தமிழர் தலையிலும் ரூ.1.28 லட்சம் கடனா? சட்டசபையில் வெடித்த காரசார விவாதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»போராடும் இளைஞர்,  மாணவர்கள் மீது தேச விரோத முத்திரை… CJP நிறுவனர் அபிஜீத் திப்கே எதிர்ப்பு
    Featured

    போராடும் இளைஞர்,  மாணவர்கள் மீது தேச விரோத முத்திரை… CJP நிறுவனர் அபிஜீத் திப்கே எதிர்ப்பு

    Editor TN TalksBy Editor TN TalksAugust 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 abjith
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ‘தேசவிரோதிகள்’ என முத்திரை குத்துவதை பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் நிறுத்த வேண்டும் என்று கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே வலியுறுத்தியுள்ளார்.

    மும்பையில் உள்ள நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் (NMACC) நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜென் Z மற்றும் ஜென் ஆல்பா தலைமுறையினருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேற்று கலந்துரையாடினார். அப்போது, உண்மையான பிரச்சினைகளுக்காக போராட இளம் தலைமுறையினருக்கு உரிமை உள்ளது என்றும், அவர்களை தேசவிரோதிகள் என அழைக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து பேசிய அபிஜீத் திப்கே, “ஜென் Z இளைஞர்களை தேசவிரோதிகள் என அழைக்கக் கூடாது, போராடுவது அவர்களின் உரிமை, அவர்கள் எழுப்பும் பிரச்சினைகள் உண்மையானவை என்று மோகன்பகவத் கூறுவதை வரவேற்கிறேன்” என்றார்.

    மேலும், ஆளும் கட்சிக்கு வழிகாட்டியாக இருக்கும் மோகன் பகவத், மாணவர்களின் போராட்டங்கள் தொடர்பான அரசியல் அணுகுமுறையை மாற்ற பாஜக தலைமைக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    கடந்த காலங்களில் பாஜகவின் மூத்த தலைவர்கள் மாணவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

    “மாணவர்களை தேசவிரோதிகள் என்று அழைப்பது பாஜக உறுப்பினர்களே. தர்மேந்திர பிரதான் அவர்களை ‘பயங்கரவாதிகளின் பி-டீம்’ என்று கூறியுள்ளார். நிதின் நபின் அவர்களை ‘வைரஸ்’ என்று குறிப்பிட்டுள்ளார். இனி மோகன் பகவத்தின் கருத்தை அவர்கள் கேட்டு, அதன்படி செயல்படுவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

    சமூக வலைதளங்களில் தவறான மற்றும் போலியான வீடியோக்கள் பரப்பப்படுவது குறித்த மோகன் பகவத்தின் கவலைக்கும் அபிஜீத் திப்கே ஆதரவு தெரிவித்துள்ளார்.

    “இதுகுறித்து நிச்சயமாக விசாரணை நடத்தப்பட வேண்டும். போலி வீடியோக்களில் பெரும்பாலானவை ஐடி செல் மூலம் உருவாக்கப்படுவதை நாம் உன்னிப்பாக கவனித்தால் தெரியும். எனவே, மோகன் பகவத் கூறிய ஆலோசனையை ஏற்று, எந்த வீடியோக்கள் உண்மையானவை, எவை போலியானவை என்பதை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

    ஜார்க்கண்டில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்திற்கும் CJP சார்பில் முழு ஆதரவு அளிப்பதாக அபிஜீத் திப்கே கூறினார்.

    “இந்தப் போராட்டத்திற்கு எங்களது முழு ஆதரவு உள்ளது. எங்களது பிரதிநிதிகள் ஏற்கனவே அங்கு சென்றுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். அவர்களது அனைத்து கோரிக்கைகளுக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். நானும் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளேன். தற்போது சில உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறேன்” என்றார்.

    மேலும், போராட்டத்தில் மாணவர்களே முன்னின்று செயல்பட வேண்டும் என்றும், அதற்கான அங்கீகாரம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    மேலும் “நாங்கள் தொடர்ந்து ஒரு அழுத்தக் குழுவாக செயல்படுவோம். இந்த நாட்டின் மிகப்பெரிய தேவை அரசாங்கத்திடம் பொறுப்புக்கூறலைக் கேட்பதுதான். நாட்டின் குடிமக்கள் ஒன்றிணைந்து பொறுப்புக்கூறலைக் கேட்கும்போது, நிச்சயம் அதை பெற முடியும். அவர்கள் ராஜினாமாவைப் பெற்றதைப் போலவே” என்றும் தெரிவித்தார்.

    Abhijeet Dipke Anti National Label CJP Student Protest Youth Protest
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநிவாரணம் vs சிறப்பு தொகுப்பு.. சட்டப்பேரவையில் வித்தியாசத்தை சுட்டிக்காட்டிய உதயநிதி!
    Next Article காவிரி விவகாரத்தை திசைதிருப்பவே முதல்வர் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு!. ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு!
    Editor TN Talks

    Related Posts

    ’நீட் தேர்வு வினாக்களை மனப்பாடம் செய்து கொண்டு சென்ற பாட நிபுணர்கள்’- அதிர்ச்சி தகவல்

    August 7, 2026

    ஆதவ் அர்ஜுனா எழுப்பிய கேள்வி.. தொகுதி மறுவரையறை குறித்து உதயநிதி சொன்ன பதில்!

    August 7, 2026

    ஒவ்வொரு தமிழர் தலையிலும் ரூ.1.28 லட்சம் கடனா? சட்டசபையில் வெடித்த காரசார விவாதம்!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ’நீட் தேர்வு வினாக்களை மனப்பாடம் செய்து கொண்டு சென்ற பாட நிபுணர்கள்’- அதிர்ச்சி தகவல்

    ஆதவ் அர்ஜுனா எழுப்பிய கேள்வி.. தொகுதி மறுவரையறை குறித்து உதயநிதி சொன்ன பதில்!

    ஒவ்வொரு தமிழர் தலையிலும் ரூ.1.28 லட்சம் கடனா? சட்டசபையில் வெடித்த காரசார விவாதம்!

    குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

    காவிரி விவகாரத்தை திசை திருப்பவே தொகுதி மறுசீரமைப்பு எம்.பி.க்கள் கூட்டம்: திமுக குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.